திருமணம் செய்ததன் காரணமாக பெண் வெட்டிக் கொலை! கணவனின் வெறிச்செயல்!

0
75
Woman stabbed to death for getting married! Husband's hysteria!
Woman stabbed to death for getting married! Husband's hysteria!

திருமணம் செய்ததன் காரணமாக பெண் வெட்டிக் கொலை! கணவனின் வெறிச்செயல்!

தென்காசி மாவட்டத்தில் கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். 30 வயதான இவர் விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கும் நெல்லை மாவட்டம் அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் சங்கீதா என்ற மகாலட்சுமி. 22 வயதான இவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் பொன்ராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார்.

சங்கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது அவரது வீட்டிற்கு வந்த ஒரு வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சங்கீதாவை சரமாரியாக வெட்டி தப்பி ஓடிவிட்டார். இதில் சங்கீதா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அங்கேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த படுகொலை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வீரகேரளம்புதூர் போலீசார் இந்த படுகொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின. வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் மகன் கண்ணன். 30 வயதான இவருக்கும் சங்கீதாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களிலேயே குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் இருவரும் சமரசம் ஆகவே இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே முறையாக விவாகரத்து பெறாமல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போன்ற பொன்ராஜை  திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் சங்கீதாவை கொலை செய்ய முடிவு செய்து, இதற்காக நேற்று காலையில் அவரது ஊரிலிருந்தே மோட்டார் சைக்கிளிலேயே கல்லூத்துக்கு வந்துள்ளார். அங்கு சங்கீதாவின் வீடு  குறித்து கேட்டறிந்த அவர் நேரடியாக, அவரது வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது. அதன் காரணமாக போலீசார் கண்ணனை பிடித்து கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.