தொடர்ந்து 3வது முறையாக பெண் குழந்தை! மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்த கணவன் கைது!!

0
26

தொடர்ந்து 3வது முறையாக பெண் குழந்தை! மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்த கணவன் கைது!!

 

ஆண் குழந்தைக்கு ஆசைபட்டு 3வது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் அடைந்த கணவன் மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்துள்ள சம்பவம்  ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.

 

ஆந்திர மாநிலத்தின் அரசு போக்குவரத்து பணிமனையில்  ஊர்காவல் படையில் வேலை செய்து வருபவர் சந்த் பாஷா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார்.

 

சந்த் பாஷா அவர்களுக்கும்  பக்கத்து ஊரை சேர்ந்த சபீஹா என்ன பெண்ணுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் ஆனது. திருமணம் ஆகி ஆண் குழந்தூக்கு ஆசைப்பட்ட சந்த் பாஷா அவர்களுக்கு முதல் முறையாக பெண் குழந்தை  பிறந்துள்ளது. ஆண் குழந்தைக்கு ஆசைபட்ட சந்த் பாஷா அவர்களுக்கு இரண்டாவது முறையும், மூன்றாவது முறையும் பெண் குழந்தையே பிறந்துள்ளது.

 

இதனால் சந்த் பாஷா அவர்களுக்கும் சபீஹா அவர்களுக்கும் தினமும் சண்டை நடந்துள்ளது. இந்த சண்டை காரணமாக அடிக்கடி சபீஹா அவர்களும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். பெற்றோர் வீட்டுக்கு சென்ற சபீஹா அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் கணவன் சந்த் பாஷா அவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர.

 

இந்த பிரச்சனை காவல் நிலையம் வரை சென்று அவர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இருந்தாலும் சந்த் பாஷா அவர்கள் மனைவி சபீஹா அவர்களை கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் ஆண் குழந்தை பெற்றுத் தராததால் சந்த் பாஷா அவர்களுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

 

இரண்டாவது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சபீஹாவை வீட்டின் மாடியில் இருக்கும் சிறிய அறையில் அடைத்து மாதக் கணக்கில் பட்னி போட்டு கை விரல்களை உடைத்து கொடுமை செய்துள்ளனர். சபீஹா அவர்களை குறித்து எந்தவொரு தகவலும் தெரியாததால் சந்த் பாஷா அவர்களின் வீட்டின் அருகே இருப்பவர்கள் சபீஹா அவர்களின் வீட்டுக்கு தகவல் கொடுத்தனர்.

 

பின்னர் சபீஹாவின் பெற்றோர் இது குறித்து காவல் துறையினரிடம் புகார் கொடுத்து காவல் துறையினர் உதவியுடன் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட சபீஹாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 

இதைத் தொடர்ந்து சந்த் பாஷா அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சபீஹா அவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.