மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின்! என்ன கேட்டார் தெரியுமா?

0
222
Stalin appealed to the Central Government! Do you know what he asked?
Stalin appealed to the Central Government! Do you know what he asked?

மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின்! என்ன கேட்டார் தெரியுமா?

கொரோனா தொற்றானது இன்றளவும் முடிவிற்கு வராத நிலையில் அடுத்தடுத்தாக புதிய தொற்றுகள் உருவாகி பரவி வருகிறது.கொரோனா தொற்றினால் நாம் அனைவரும் பல உயிர்களை இழந்து நிற்கிறோம்.அந்தவகையில் கருப்பு பூஞ்சை என்ற தொற்று தற்போது அதிகளவு பரவி வருகிறது.சேலம்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்து வருகின்றனர்.இத்தொற்றானது காற்றின் மூலம் பரவுகிறது என கூறுகின்றனர்.

இத்தொற்று சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகப்படியாக பரவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்களின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.அந்தவகையில் இத்தொற்றால் தற்போது அதிகளவு மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருவதால் அதற்கான தடுப்பு மருந்தை உடனடியாக தமிழகத்திற்கு அனுப்புமாறு மத்திய சுகாதரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் தற்போது தமிழகத்தில் 673 பேருக்கு இந்த கருப்பு பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.அதற்கான 30,000 தடுப்பு மருந்து குப்பிகளை தமிழகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.இத்தடுப்பு மருந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதத்திலிருந்து காப்பாற்றலாம்.

Previous articleஇவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்! ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
Next articleபன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா? மேற்கொண்ட ஆய்வு முடிவுகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here