ஊரடங்கு நேரத்தில் காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு : தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

0
64

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார்.

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தற்போது இருக்கும் நிலையில் நீட்டிக்கப்படலாம் என்றே அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தாலும் அவர்களுக்கு போதிய ஓய்வு இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது தமிழக அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது, அதில் ஊரடங்கு காலத்தில் காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கியுள்ளது. அந்த உத்தரவில் ஓய்வு பெற்ற மத்திய ஆயுத படையினருக்கு மட்டுமே குறிப்பிட்டு வாய்ப்பை வழங்கியுள்ளது மாநில அரசு.

அவர்களுக்கு வயது வரம்பு 40 முதல் 50 வரை இருக்க வேண்டும் என்று அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாநில காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகும்படி அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K