தவறான சிகிச்சையால் உயிரிழந்த 2ஆம் வகுப்பு மாணவி?

0
88
Student beaten to death by teacher

பொன்னேரியில் தனியார் மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையால் 2ஆம் வகுப்பு மாணவி ஒருவர் இறந்துவிட்டதாக அந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொன்னேரியில் MGR நகரை சேர்ந்தவர் குமார் (38) அவ்ருடைய மனைவி ரேவதி (28) இவர்களுடைய குழந்தை லட்சிதா (7). லட்சிதா தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி லட்சிதாவிற்கு தீடிரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லட்சித்தாவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கூடி சென்றனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஊசி போட்டுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வந்த லட்சிதாவிற்கு கழுத்தில் கட்டி வந்துள்ளது. கட்டி பெரிதாகி கொண்டிருக்கும் நிலையிலேயே உடல் முழுவதும் பரவி உள்ளது.

இதன் காரணத்தினால் லட்சிதா மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் சென்னை குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி லட்சிதாவின் உயிர் பிரிந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோரும், உறவினர்களும் அந்த தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினை.

தகவலிருந்து வந்த பொன்னேரி போலீசார் அவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்பின்னர் குழந்தையின் பெற்றோர் மருத்துவனையின் தவறான சிகிச்சையினால் தங்களது குழந்தை இறந்துவிட்டதாக போலீசில் புகாரளித்துள்ளனர்.

இந்த வழக்கினை பதிவு செய்து பொன்னேரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

author avatar
Parthipan K