திருமணமான 9 மாதத்தில் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை?

0
166

தக்கலை அருகே திருமணமான 9 மாதங்களில், அரசு மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்புகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த கிருஷ்ணா ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவரான ஆர்யா என்பவருக்கும்  9 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களில் ஆர்யா மேற்படிப்பு படிப்பதற்காக அகமதாபாத் சென்றதால் லூலு கிருஷ்ணா தன் பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மனைவியுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசிய கொண்டு இருந்த கிருஷ்ணா அறையின் கதவு வெகு நேரமாகியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கிருஷ்ணா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Previous articleதனுஷ்-அனிருத்தை மீண்டும் இணைத்து வைத்த பிரபல இயக்குனர்!
Next articleவிக்ரமின் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்!