ஒட்டு மொத்த மலமும் வெளியேற இதனை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

0
225
#image_title

ஒட்டு மொத்த மலமும் வெளியேற இதனை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

மலச்சிக்கல் பிரச்சனை என்பது நம் உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். நமக்கு ஏற்படும் மலச்சிக்கலை குணப்படுத்த பலவிதமான மருந்துகளையும், மாத்திரைகளையும், சூரணங்களையும் சாப்பிட்டும் பயன் இல்லாமல் போயிருக்கும். அந்த மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய இந்த பதிவில் அருமையான மருந்தை எவ்வாறு தயார் செய்வது, எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம். இந்த மருந்தை வயிறு உப்புசம், உடல் எடையை குறைக்க, கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் பயன்படுத்தலாம். இந்த மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.

 

மலச்சிக்கலை போக்கும் மருந்தை தயார் செய்யும் முறை…

 

முதலில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வெதுவெதுப்பான நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் அரை எலுமிச்சம் பழத்தை பிளந்து கொள்ள வேண்டும். பிறகு இதில் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.

 

இந்த மருந்தை பயன்படுத்தும் முறை…

 

இந்த மருந்தை காலை நேரத்தில் தான் குடிக்க வேண்டும். அதுவும் காலை 4 மணியிலிருந்து 5.30 மணிக்குள் குடிக்க வேண்டும். இந்த மருந்தை மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம். இதை குடித்த 10 நிமிடத்தில் இருந்து 5 மணி நேரத்திற்குள் இந்த மருந்து வேலை செய்ய தொடங்கும்.

 

அவ்வாறு மருந்து வேலை செய்யவில்லை என்றால் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய்க்கு பதிலாக இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெயை இதில் சேர்த்து மறுநாள் காலையில் குடிக்க வேண்டும். இது பேதியை ஏற்படுத்தும் என்பதால் சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பயன்படுத்த வேண்டும்.

 

இந்த மருந்தை ஒரு வயது குழந்தைகள் முதல் கொடுக்கலாம். கால் டேபிள் ஸ்பூன் அளவு மட்டும் இந்த மருந்தை கொடுக்க வேண்டும். 5 வயது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றால் இந்த மருந்தை அரை டேபிள் ஸ்பூன் அளவு கொடுக்கலாம்.

 

இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் நாளுக்கு முந்தைய இரவு லேசான உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும். அதிகம் மசாலா பொருட்கள் உள்ள உணவை சாப்பிடக் கூடாது. இந்த மருந்து வேலை செய்யும் பொழுது அதாவது பேதி ஆகும் பொழுது ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வெதுவெதுப்பான நீர் குடிக்க வேண்டும். எந்த சமயம் அதிகம் சிறுநீர் வெளியேறுகிறதோ அப்பொழுது நீங்கள் ஒரு டம்ளர் மோர் குடிக்கலாம். மோர் குடித்து விட்டால் பேதிநின்று விடும்.