ராதிகா எனது அம்மா இல்லை, ஆன்ட்டி தான்: வரலட்சுமி பரபரப்பு பேட்டி

0
445

சரத்குமாரின் இரண்டாவது மனைவி ராதிகாவை சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் வரலட்சுமி ஆன்ட்டி என்று தான் அழைத்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒருவருக்கு பதிலளித்த வரலட்சுமி, ‘ராதிகா எனது அம்மா இல்லை என்பதால் அவரை ஆன்ட்டி என்று அழைக்கிறேன். எனக்கு அம்மா என்று சாயா என்பவர் இருக்கிறார். ஒரு நபருக்கு ஒரு ஒருவர்தான் அம்மாவாக இருக்க முடியும். எனவே எனக்கு ஏற்கனவே உண்மையான அம்மா இருப்பதால் நான் அவரை மட்டுமே அம்மா என்று அழைக்க முடியும். ராதிகாவை எப்படி அம்மா என்று அழைக்க முடியும்? என்று கூறினார்.

இருப்பினும் ராதிகா மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எனது தந்தை அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும் எனது தந்தை மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. ஏனெனில் அவர் எனக்கு ஒரு நல்ல அப்பாவாக தான் இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறார்.

ராதிகாவும் நானும் நல்ல உறவில் தான் இருக்கிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் வேலை வெட்டி இல்லாத நாய்கள் சிலர் இதுகுறித்து குலைஒத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வெட்டி இருந்தால், இதைப் பற்றி ஏன் பேசப் போகிறார்கள்? என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Previous article8 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வொயிட் வாஷ்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்?
Next articleநரம்பு புடைக்க டயலாக் பேசிய சீமான் தம்பி! காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார்..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here