வீடே மணக்கும் மசாலா டீ.. இந்த இரண்டு பொருட்கள் சேர்த்தால் மட்டும் போதும்!!

0
54
#image_title

வீடே மணக்கும் மசாலா டீ.. இந்த இரண்டு பொருட்கள் சேர்த்தால் மட்டும் போதும்!!

நம்மில் பலர் டீ அல்லது காபிக்கு அடிமையாக இருப்போம்.இதை குடித்தால் போதும் உணவு கூட வேண்டாம் என்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் இதை பசிக்கு உணவாக எடுத்து இருப்போம்.இப்படி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பானமாக திகழும் இதில் சில நன்மைகள் இருந்தாலும் அதிகளவு தீமைகளும் இருக்கிறது.

டீ பருக வேண்டும் அதே சமயம் அவை ஆரோக்கியமாதாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்தி செய்து பாருங்கள் தேநீர் மிகவும் சுவையாகவும்,ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*பால் – 2 கப்

*ஏலக்காய் – 4

*பட்டை – சிறு துண்டு

*இலவங்கம் – 4

*இஞ்சி – சிறு துண்டு

*டீ தூள் – 2  தேக்கரண்டி

*சர்க்கரை – 3 தேக்கரண்டி

செய்முறை:-

1.முதலில் டீ போடுவதற்கு தேவையான மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளவேண்டும்.அதாவது சிறு துண்டு பட்டை,4 இலவங்கம்,4 ஏலக்காய் உள்ளிட்டவற்றை எடுத்து ஒரு உரலில் போட்டு அதோடு 1 துண்டு இஞ்சி சேர்த்து இடித்து கொள்ள வேண்டும்.

2.அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவேண்டும்.பிறகு இடித்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

3.பின்னர் தினமும் டீ தயாரிக்க பயன்படுத்தும் டீ தூளில் 2 தேக்கரண்டி அதில் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

4.அதன் பிறகு அந்த டீ பாத்திரத்தில் 2 கப் பால் ஊற்றி அதனோடு 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

5.நன்கு கொதித்து வந்த பின்னர் 3 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்கி விடவும்.

6.இதன் பிறகு அடுப்பை அணைத்து 1 நிமிடத்திற்கு பிறகு அதை வடிகட்டி பருகவும்.இவ்வாறு செய்தால் மசாலா டீ மிகவும் வாசனையாகவும்,சுவையாகவும் இருக்கும்.