பாட்டி வைத்தியம்.. தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வாயு தொல்லை நீங்க 5 நிமிடம் போதும்!!

0
56
#image_title

பாட்டி வைத்தியம்.. தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வாயு தொல்லை நீங்க 5 நிமிடம் போதும்!!

ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் பெரும்பாலான மக்கள் வாயுத் தொல்லையால் அவைத்திப்பட்டு வருகின்றனர்.இந்த பாதிப்பால் பொது வெளியில் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டு விடுகிறது.

இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே சரி செய்துவிடுவது நல்லது.இதற்கு இயற்கை வழிகளில் உரிய தீர்வு இருக்கிறது.இவற்றை செய்வதன் மூலம் உடலில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் உடலை விட்டு வெளியேறி விடும்.இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*சோம்பு – 1 தேக்கரண்டி

*தண்ணீர் – 1 கிளாஸ்

செய்முறை:-

முந்தின நாள் இரவு ஒரு பவுல் எடுத்து அதில் 1 தேக்கரண்டி சோம்பு சேர்த்து கொள்ளவும்.பின்னர் அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.

மறுநாள் காலையில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஊறவைத்துள்ள சோம்பு தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

பின்னர் அதனை ஒரு டம்ளருக்கு வடிகட்டி வெறும் வயிற்றில் பருகவும்.இவ்வாறு செய்வதன் மூலம் வயிற்றில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் முவதுமாக வெளியேறி குடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மற்றொரு தீர்வு:-

முதலில் கருந்துளசி 1 கைப்பிடி அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.அதில் 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அலசவும்.இப்படி செய்தால் துளசியில் ஒட்டி கிடந்த மண்,பூச்சி உள்ளிட்டவை நீங்கி விடும்.

நன்கு சுத்தம் செய்த பின் ஒரு அம்மிக்கல்லில் போட்டு விழுது போல் அரைத்து கொள்ள வேண்டும்.பின்னர் அதன் சாற்றை ஒரு பவுலில் பிழிந்து கொள்ளவும்.

அதேபோல் இஞ்சி சிறு துண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பிறகு அதை ஒரு அம்மிக்கல்லில் போட்டு விழுது போல் அரைத்து அதன் சாற்றை ஏற்கனவே எடுத்து வைத்துள்ள துளசி சாற்றுடன் கலக்கவும்.அம்மிக்கல் இல்லாதவர்கள் மிக்ஸி பயன்படுத்தி அரைக்கலாம்.

தயார் செய்து வைத்துள்ள இந்த சாற்றை குடித்த 5வது நிமிடத்தில் உடலில் நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த கெட்ட வாயுக்கள் அனைத்தையும் வெளியேற்றி விடும்.

இந்த ரெமிடியை அவ்வப்போது செய்து பருகி வந்தோம் என்றால் ஆயுசுக்கும் வாயு தொல்லை இருக்காது.