பிரச்சனைக்கு மேல் பிரச்சனை துரத்தி வருகிறதா? அப்போ இதை செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்!!

0
93
#image_title

பிரச்சனைக்கு மேல் பிரச்சனை துரத்தி வருகிறதா? அப்போ இதை செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்!!

பிரச்சனை இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடைப்பதில்லை. நாம் அமைதியாக இருந்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனை தானாக வந்து விடுகிறது என்று ஆதங்கப்படும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்மீக வழிகளை கடைபிடித்து பாருங்கள். நிச்சயம் உரியத் தீர்வு கிடைக்கும்.

தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட வழிகள்:-

வாரந்தோறும் திங்கள், புதன், சனி அன்று நீங்கள் குளிக்கும் நீரில் 1 தேக்கரண்டி தயிர் கலந்து குளிக்கலாம்.

செவ்வாய், வியாழன், வெள்ளி அன்று ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, சிறிது மஞ்சள் தூள் மற்றும் பச்சைக் கற்பூரம் கலந்து குளிக்கவும்.

வெள்ளிக்கிழமை காலை பூஜை செய்யும் போது ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை, ஒரு ரூபாய் நாணயம் சேர்த்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து “எந்த தவறு செய்து இருந்தாலும் எந்த பாவம் செய்து இருந்தாலும் எங்களை மன்னித்து எந்த கர்ம வினை தொடர்ந்தாலும் அதிலிருந்து எங்களை மீட்டு கொடு தெய்வமே” என்று மனதுருகி வேண்டி தூப தீப ஆராதனை செய்து வழிபடவும்.

பின்பு, அன்று இரவு அந்த முடிச்சை உங்கள் தலையணை உறைக்குள் வைத்து உறங்கவும். இவ்வாறு தொடர்ந்து 3 நாட்களுக்கு செய்யவும்.

மூன்று நாட்கள் சுத்தமாக இருக்க வேண்டும். நான்காவது நாள் காலை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் கோயிலில் இந்த முடிச்சை அப்படியே காணிக்கை செலுத்தி விடவும்.

இவ்வாறு செய்து வந்தோம் என்றால் 21 நாட்களில் நிச்சயம் நல்ல மாற்றத்தை உணர முடியும்.