மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது எப்படி?

0
252
#image_title

மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது எப்படி?

மார்கழி மாதம் ஓர் ஆன்மீக மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமை நாட்களில் பெருமாள் வழிபாடு செய்தால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். பண விரையம் ஏற்படாமல் பண வரவு அதிகரித்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.

மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது எப்படி?

சனிக்கிழமை காலை அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்யவும். பின்னர் தலைக்கு குளித்து விட்டு அவல் வாங்கிக் கொண்டு பெருமாள் கோயிலுக்கு செல்லவும். வாங்கிய அவலை பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.

ஆவலோடு நாட்டு சர்க்கரை சேர்த்தும் பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்தால் இன்னும் சிறப்பு. நெய்வேத்தியம் செய்த பின்னர் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பணக் கஷ்டம் தீர்ந்து பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும். அவலுடன் பெருமாளுக்கு துளசி வாங்கி சென்று நெய்வேத்தியம் செய்யலாம்.

அதேபோல் மகா லட்சுமி தாயாருக்கு தாமரைப்பூ வாங்கி சென்று வைத்து வழிபடலாம். வழிபாட்டை முடித்து விட்டு பெருமாளுக்கு படைத்த நெய்வேத்தியத்தை வாங்கி பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம். இவ்வாறு செய்தால் உங்களுக்கான கடன் பிரச்சனை நீங்கி செல்வம் பெருகும்.