நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, அவரை பனையூர் பண்ணையார் எனவும், வொர்க் பிரம் ஹோம் பாலிட்டிக்ஸ் எனவும் அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், விஜய் எதற்கும் விளக்கம் அளிப்பதில்லை.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு நேற்று கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் நடைபெற்றது. அதில், கலந்துகொள்வதற்காக விஜய் கோவை வந்தார். எனவே, எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என ரசிகர்களும் தவெக கட்சியினரும் விமான நிலையத்தில் திரண்டனர். பலரும் பொருட்களை தள்ளி செல்லும் டிராலிகள் மற்றும் தடுப்பு கம்பிகள் மீது ஏறி நின்று கொண்டனர். இதனால், அவற்றில் பல சேதமடைந்தது. அதோடு, விமான நிலையமே களேபரமானது. விஜய் வந்த பின் அவர் விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு வேனில் சென்றபோது விஜய் ரசிகர்கள் பைக்கில் அவரை பின் தொடர்ந்தனர்.
ஒருஇடத்தில் நின்று விஜய் வேனில் இருந்து ரசிகர்களை பார்த்து கையசைத்துக்கொண்டிருந்த போது எதுவழியாகவோ ஏறி சில ஆர்வக்கோளாறு விஜய் ரசிகர்கள் வேனின் மீது குதித்தனர். இதைப்பார்த்து விஜயே அதிர்ச்சியடைந்து இப்படியெல்லாம் செய்யக்கூடாது என அன்பு கட்டளையும் இட்டிருக்கிறார்.
இந்நிலையில், தவெகவினர் சிலர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் காலில் விழும் வீடியோவை பகிர்ந்து ‘இவர்கள் தவெக கொத்தடிமைகள். நடுரோட்ல புஸ்ஸி ஆனந்த் காலில் வரிசையா விழறானுங்க. அவரும் அதை ரசிக்கறாரு. இந்த லட்சணத்துல மத்தவங்களை கொத்தடிமைன்னு கமண்ட் பண்ணி நொட்டிட்டு இருக்கானுங்க’ என கோபப்பட்டிருக்கிறார்.
தவெக கொத்தடிமைகள்.
நடுரோட்ல புஸ்ஸி கால்ல வரிசையா விழறானுங்க. அவரும் அதை ரசிக்கறாரு.
இந்த லட்சணத்துல மத்தவங்களை.. கொத்தடிமைன்னு கமண்ட் பண்ணி நொட்டிட்டு இருக்கானுங்க. https://t.co/OJZuC3yS2g
— Blue Sattai Maran (@tamiltalkies) April 30, 2025