அமைச்சர் சேகர்பாபு கிட்ட பேசுறியா? போலீசாரை மிரட்டிய நபருக்கு நேர்ந்த கதி

0
244

அமைச்சர் சேகர்பாபு கிட்ட பேசுறியா? போலீசாரை மிரட்டிய நபருக்கு நேர்ந்த கதி

ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட ஆட்டோ டிரைவர் காவல் உதவி ஆய்வாளரிடம் கடுமையான வாக்குவாதம் செய்தது வீடியோவாக சமூக வலைதளங்களில் அதையடுத்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.நோய்த்தொற்று காரணமாக, அதனை முற்றிலுமாக தடுப்பதற்கான தமிழக அரசு மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு இருக்கிறது. பேருந்துகளில் வாடகை ஆட்டோக்கள் டாக்சிகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனை அடுத்து சென்னை முழுவதும் பல சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள் காவல்துறையை சார்ந்தவர்கள். அதேபோல சென்னையில் இ.பாஸ் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. போல இ.பாஸ் இல்லாமல் தேவை என்று வெளியே சுற்றித் திரியும் நபர்களிடம் விசாரணை செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை பாரிமுனையில் இருக்கின்ற பாரதி மகளிர் கல்லூரி அருகில் முத்தியால்பேட்டை காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். காலை ஒன்பது முப்பது மணி அளவில் அந்த வழியாக வந்த ஆட்டோவை விட்டு விட்டு அந்த ஆட்டோவில் ஓட்டுநர் பெரம்பூர் தில்லைநாயகம் தெருவைச் சார்ந்த அணி என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அவர் முதலில் மருத்துவமனைக்கு செல்வதாக அதன்பிறகு சவாரி செல்வதாகவும் முன்னுக்குப் பின் முரணான பதிலை தெரிவித்திருக்கிறார். அத்துடன் அவர் ஆதரவற்றோர் மாற்றுத் திறனாளிகளுக்கான அவசர காரணம் என்று தெரிவித்து பெறப்பட்ட இ பதிவையும் காண்பித்திருக்கிறார்.இருந்தாலும் வாகனத்தில் அவ்வாறு யாரும் இல்லாத காரணத்தால், காவல்துறையினர் அவரிடம் மீண்டும் விசாரணை செய்து இருக்கிறார்கள். அப்போது ஆட்டோ ஓட்டுனர் உண்மைக்குப் புறம்பான காரணத்தைத் தெரிவித்து இ-பதிவு பெற்று இருந்தது தெரிய வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து ஆட்டோவை பறிமுதல் செய்யும் பணியை காவல் உதவி ஆய்வாளர் கிருத்திகா முன்னெடுத்து இருக்கின்றார் ஆனால் இதனால் ஆத்திரம் கொண்ட ஆட்டோ ஓட்டுனர் வாக்கு வாதம் செய்வதற்கு தொடங்கியிருக்கின்றார் இதனை கண்டுகொள்ளாத உதவி ஆய்வாளர் ஆட்டோவையும் பறிமுதல் செய்ய முயற்சி செய்திருக்கிறார்.ஆட்டோ ஓட்டுனரிடம் சாவியை கேட்டும் அவர் கொடுக்கவில்லை. ஆட்டோ சாவியை எடுத்த சமயத்தில் ஆட்டோ ஓட்டுனர் உதவி ஆய்வாளரின் கையை பிடித்து இழுத்திருக்கிறார். இதில் உதவி ஆய்வாளர் குறிப்பிட்ட அவர்களின் கையில் லேசான நககீரல் உண்டாகியிருக்கிறது.

அதோடு உதவி ஆய்வாளர் கிருத்திகா நான் என்னுடைய பணி தான் செய்கிறேன் என்று தெரிவித்ததோடு ஆட்டோ ஓட்டுனரை கண்டித்தும் இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் நீ ஒரு பெண் நீயே இவ்வாறு பேசுகிறாயே என்று அவரை இழிவாகப் பேசி இருக்கின்றார். அருகிலிருந்தவர்கள் அவருக்கு அறிவுரை கூறிய போதும் அதனை ஏற்றுக்கொள்ளாத ஆட்டோ ஓட்டுனர் நாகரீகமும் இல்லாமல் ஆபாசமாக பேசியதுடன் மட்டுமல்லாமல் உதவி ஆய்வாளரை நாசமாய் போய்டுவ என்று சபிக்கவும் செய்திருக்கிறார்.

பின்னர் அந்த ஆட்டோ ஓட்டுனர் திடீரென்று யாரோ ஒருவருக்கு போன் செய்து அவருடன் பேசவேண்டும் என்று உதவி ஆய்வாளரை வற்புறுத்தி இருக்கின்றார். இதற்கு மறுப்பு தெரிவித்த அவர் தொடர்ந்து ஆட்டோவை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது திடீரென உதவி ஆய்வாளரை நோக்கி அந்த ஓட்டுனர் அமைச்சர் சேகர்பாபு கிட்ட பேசுறியா என்று ஒருமையில் பேசி மிரட்டி இருக்கின்றார். அதன்பிறகு ஆட்டோவை அங்கேயே விட்டு விட்டு கோபத்துடன் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் ஆகார் அலி செயல் அந்த வழியாக சென்ற எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தது. இதற்கிடையில் இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கியது. ஆட்டோ ஓட்டுநர் காவல் உதவி ஆய்வாளர் இடம் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறி முத்தியால்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். அதோடு அந்த ஓட்டுனர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருக்கிறேன் என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous articleகோவேக்சினை விட கொவிஷீல்டில் நோயெதிர்ப்பு திறன் அதிகம்! ஆய்வின் மூலம் கண்டுபிடிப்பு!
Next articleமாணவியின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவு! ஆப்பிள் நிறுவனம் 35 கோடி இழப்பீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here