மூக்கில் அடிக்கும் கொரோனா ஸ்பிரே! அனைவரின் கவனத்தை ஈர்த்த சீனா!

0
121

உலகம் முழுவதும் கொரோணா பரவி பல்வேறு தாக்குதல்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் மூலம்தான் கொரோனா வந்தது இது இயற்கை அல்ல, செயற்கையே என்று நிரூபிக்க பல்வேறு தரப்புகள் சொல்லிக் கொண்டிருந்தாலும், அதற்கான உறுதியான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் திணறி வருகிறது.

இந்நிலையில் பல்வேறு நாடுகள் பல்வேறு விதமான தடுப்பு மருந்துகளை தங்களது குடிமக்களுக்கு தந்து வருகின்றன. தடுப்பு மருந்துகள் தரத்தை உயர்த்தவும் கொரோனாவை முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்துடன் தான் ஆராய்ச்சிகள் மேலும் நடந்து வருகின்றன.

அமெரிக்கா கண்டுபிடித்த தடுப்பு மருந்து ஆன பைசர்-பயன்டெக் தடுப்பு மருந்து முதல் ரஷ்யா தடுப்பு மருந்து ஸ்புட்னிக் 5 வரை அனைத்தும் உருமாறி வரும் கொரோனா வைரஸை சமாளிக்க ஏதுவாக உள்ளன.

இந்நிலையில் சீனா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது மூக்கு மற்றும் வாயின் வழியே கொரோனா பரவுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் சீனா நாம் மூக்கில் உள்ள நாசித்துவாரத்தில் அடிக்கும் ஸ்பிரே வடிவில் ஒரு தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளது. இது ஒரு திரவ நிலை தடுப்பு மருந்து ஆகும்.

வலி நிவாரணிக்கு நாம் அடிக்கும் ஸ்பிரே போல நாசித்துவாரத்தில் இதை நாம் அனைவரும் அடித்துக் கொள்ளலாம் என்று சொல்லியுள்ளது. இந்த திரவ நிலை தடுப்பு மருந்தை நாசிகளில் அடித்துக் கொண்டு அதனை சுவாசிக்கும் பொழுது நுரையீரலுக்குள் சென்று கொரோனா வைரஸ் தாக்கத்தை நுரையீரலிலிருந்து குறைகிறது என்று சொல்லியுள்ளது.

எட்டரை கோடி தடுப்பு மருந்துகள் இதுவரை சீனாவின் அனைத்து மாகாணங்களுக்கும் விற்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு ஸ்ப்ரே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த திரவநிலை தடுப்பு மருந்து சோதனை கட்டத்திலேயே உள்ளது. இது உண்மையிலேயே நல்ல பலனை தருகிறது என்றால் பொது மக்களுக்கு அளிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.