சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை! லாரியின் முன்பக்கம் சேதம் 

0
184
#image_title

சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை! லாரியின் முன்பக்கம் சேதம் 

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை லாரியின் முன்பக்கத்தை சேதப்படுத்தியதோடு வழியாக வந்த கேரளா அரசு பேருந்தை தாக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது பரபரப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வன பகுதியில் ஏராளமான காட்டு விலங்குகளின் புகலிடமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று சின்னார் சாலையில் யானைக் கூட்டத்திலிருநாது பிரிந்து சென்ற ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் உள்ள சாலையில் தனியாக உலாவி கொண்டு இருந்தது.

அப்போது சாலையில் சென்று கொண்டு இருந்த கேரள அரசு பேருந்தை தாக்க முயற்சி செய்து உள்ளது. பின்னர், அதே சாலை வழியாக வந்த லாரியின் முன் பக்கத்தை சேதப் படுத்தியது. பின்னர் சிறிது நேரம் நின்று கொண்டு இருந்த காட்டு யானை தனது கூட்டத்துடன் சென்றதால் சாலையில் வாகன போக்குவரத்து மீண்டும் துவங்கியது.

சாலையின் நடுவே ஒற்றை காட்டு யானை லாரியின் முன் பக்கத்தை தாக்கிய சம்பவம் அப் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகளுக்கும் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.