“மரியாதையாக பேசினால் நானும் மரியாதையாக பேசுவேன்…” ப்ரமோஷன் நிகழ்ச்சியில் டாப்ஸி கோபம்!

0
71

“மரியாதையாக பேசினால் நானும் மரியாதையாக பேசுவேன்…” ப்ரமோஷன் நிகழ்ச்சியில் டாப்ஸி கோபம்!

நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இவர். தற்போது டாப்ஸி தமிழ் திரையுலகில் இருந்து சென்று பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கதாபாத்திரங்களில் அதிகம் கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார். அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள டோபரா திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது அவர் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் நம்பர் ஒன் ப்ரமோஷன் நிகழ்ச்சியாக கருதப்படும் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சிக்கு ஏன் அவர் செல்லவில்லை எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டாப்ஸி “என்னை அவர்கள் அழைக்கும் அளவுக்கு என்னுடைய செக்ஸ் வாழ்க்கை ஒன்றும் சுவாரஸ்யமானது இல்லை.” எனக் கூறியுள்ளார். டாப்ஸியின் இந்த நக்கல் கமெண்ட் பாலிவுட்டில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஏற்கனவே டாப்ஸியின் இந்த கமெண்ட் பரபரப்பைக் கிளப்பிய நிலையில் இப்போதும் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மும்பையில் நடந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு டாப்ஸி வருகை தந்தார். அப்போது அவர் தாமதமாக வந்ததாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக பத்திரிக்கையாளர் அவரிடம் வாக்குவாதம் செய்ய பதிலுக்கு டாப்ஸி “நான் என் வேலையை சரியாக செய்கிறேன். நீங்கள் என்னிடம் கத்துகிறீர்கள். கேமரா உங்களை நோக்கி இருந்தால் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் எனத் தெரியும்.” என ஆவேசமாக பேசினார். இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.