தமிழக அரசின் ஓராண்டு சாதனை இதுதான்! அண்ணாமலையின் அதிரடி சரவெடி!

0
123

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் 8 வருட கால சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று கொண்டு சிறப்புரையாற்றினார்.

அந்த சமயத்தில் அவர் ஆற்றிய உரையின் போது கடந்த ஒரு வருட கால திமுக ஆட்சியில் ஒரு குடும்பம் நிம்மதியாக இருக்கிறது என்று சொன்னால் அது கோபாலபுறம் குடும்பம்தான் என்று தெரிவித்ததோடு, சாதாரண குடும்பத்திற்கு நிம்மதி என்பதே இல்லை.

சென்ற ஒரு வருட காலத்தில் கூட்டு பலாத்காரங்கள், போதைப்பொருள் விற்பனை, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படுவது, உள்ளிட்டவை அதிகரித்து வருகின்றன. தவறு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் இந்த ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது லாக்கப் இறப்புகள் நடைபெறுவதற்கு காரணம் காவல்துறையினர் கிடையாது. ஆட்சியாளர்கள் தான் தமிழக அமைச்சர்கள் 30 வருடங்களுக்கு மேலாக தங்களை உத்தமர்களாக பொதுமக்களிடம் காட்டி நடித்து வந்தார்கள்.

தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் செய்த பழைய தொழில்கள் ஞாபகம் வருவதை போல பேச ஆரம்பித்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

அவர்களுடைய இந்த செயல் அவர்கள் செய்துகொண்டிருந்த பழைய தொழிலான திருட்டு, ரவுடிசம், குடிநீர் லாரி ஓட்டுபவர்கள் ஆக இருந்தார்கள் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இருக்கிறது எனவும், அவர்களுடைய பேச்சை பெண்களால் காது கொடுத்து கேட்க கூட முடியாது எனவும், திமுக ஆட்சியாளர்கள் சினிமா குடும்பம் என்ற காரணத்தால், திடீர் ஆய்வு என்ற பெயரில் சில திரைப்பட இயக்குனர்களை வைத்துக்கொண்டு சினிமா படப்பிடிப்பு போல நடத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் 517 வாக்குறுதிகளில் 15 வாக்குறுதிகளை கூட அவர்கள் முழுமையாக இதுவரை நிறைவேற்றவில்லை. அதிலும் கும்பகோணத்தை 100 நாட்களில் மாவட்டம் ஆக்குகிறோம் என்று வாக்குறுதி வழங்கினார்கள்.

ஆனாலும் இதுவரையில் அதுதொடர்பாக எதுவுமே செய்யவில்லை கும்பகோணத்தை மாவட்டமாக பிரகடனம் செய்தால் அதனை கண்டிப்பாக ஆன்மீக நகரமாக அறிவிப்பு செய்து நாங்கள் மத்திய அரசின் மூலமாக பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு கிடைக்க வழி செய்வோம். சிறப்பு தொடர்வண்டி உள்ளிட்ட பல்வேறு விதமான வளர்ச்சிக்கு நாங்கள் காரணமாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சியின் ஒரு வருட கால நிறைவில் குறைந்தபட்சம் 120 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கலாம் என்று தெரிவித்த அவர் இது தொடர்பாக தமிழக மக்களுக்கு பாஜகவின் சார்பாக வெள்ளை அறிக்கை கேட்டபோது ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் இதுவரையில் அது தொடர்பாக எந்தவிதமான பதிலும் வழங்கவில்லை என்றும், அவர்களுடைய ஊழல் வெளியே தெரிந்து விடக்கூடாது என்று குடும்ப ஆட்சியை பற்றி மக்கள் பேசிவிடக்கூடாது என்பதற்காகவும், அவர்களுடைய உணர்ச்சிகளை தூண்டும் விதத்தில் மேகதாது அணை கட்டும் பிரச்சனையை கையிலெடுத்திருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்திருக்கிறார் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை.

இருந்தாலும் கூட ஒரு காலத்திலும் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது என்பதை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இன்று பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறார்.

அதில் இன்னும் ஒன்றரை வருடங்களில் அதாவது 578 நாட்களில் நாடு முழுவதும் புதிதாக 10 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

அதேபோன்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறார். அதில் 17 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் ராணுவத்தில் இணைந்து ஒரு வருடத்திற்கு 4.5 லட்சம் முதல் 6 லட்சம் வரையில் என்ற நல்ல சம்பளத்துடன் 4 வருடங்கள்  பணி முடிந்த பிறகு வீடு விரும்புவதாக இருந்தால் 11,72,000த்துடன் வீடு திரும்பலாம் என்ற திட்டமும் அற்புதமான திட்டமாக இருக்கிறது. இதையும் இன்றைய இளைஞர்கள் நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாஜக 3வது முறையாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்றும் அதில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் எனவும், அவர் கூறியிருக்கிறார்.