சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே தீப்பிடித்து எரிந்த பள்ளி பேருந்து! அரக்கோணத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

0
80

சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே தீப்பிடித்து எரிந்த பள்ளி பேருந்து! அரக்கோணத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

அரக்கோணம் அருகே பள்ளி மாணவிகளை அழைத்து சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் பயணம் செய்த ௧௦ மாணவிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஜோதி நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் வழக்கம்போல பள்ளி பேருந்து நேற்று (செப்.9-ம் தேதி) பள்ளிக்கு மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்தது.

அப்போது அரக்கோணம் அருகேயுள்ள சேந்தமங்கலத்தில் காஞ்சிபுரம் – அரக்கோணம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது சற்றும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென பேருந்து தீப்பற்றி எரிந்தது.

இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திலேயே பேருந்தை ஓட்டுனர் நிறுத்தியுள்ளார். உடனே பேருந்திலிருந்து மாணவிகளும் ஓட்டுநரும் கீழே இறங்கினர். இச்சம்பவத்தில் தீப்பிடித்த அந்த பள்ளிப் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தகவலை அறிந்த அரக்கோணம் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து நெமிலி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிப் பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.