சென்னை விமான நிலைய ஊழியர் கொலை வழக்கில் கைதான அழகி சிறையில் அடைப்பு!! 2 பேருக்கு வலைவீச்சு!!

0
203
#image_title

சென்னை விமான நிலைய ஊழியர் கொலை வழக்கில் கைதான அழகி சிறையில் அடைப்பு 2 பேருக்கு வலைவீச்சு.

விழுப்புரத்தை சேர்ந்தவர் ஜெயந்தன் (29). இவர் சென்னையை அடுத்த நங்கநல்லூர் என்.ஜி.ஒ., காலனி 3வது தெருவில் தனது சகோதரி வீட்டில் கடந்த 5 ஆண்டு்களாக தங்கி சென்னை விமான நிலையத்தில் தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த மார்ச் மாதம் 18ந் தேதி வேலைக்கு சென்று விட்டு சொந்த ஊர் போவதாக கூறியவர் திடீரென மாயமானார். அவரை கண்டு பிடித்து தரும்படி பழவந்தாங்கல் போலீசில் சகோதரி புகார் செய்து இருந்தார்.

இது பற்றி பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் டவர் புதுக்கோட்டையை காட்டியது.

இதையடுத்து புதுக்கோட்டை செம்மாளம்பட்டி ஆலவாயல் பொன் அமராவதியை சேர்ந்த பாக்கியலட்சுமி(38) என்பவரிடம் நடத்திய விசாரணையில், தாம்பரத்தில் பாலியல் தொழில் செய்த போது ஏற்பட்ட பழக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் 2021ம் ஆண்டு பிரித்து விட்டோம். இந்த நிலையில் கடந்த மாதம் 19ந் தேதி தன்னை ஜெயந்தன் சந்தித்த போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அவற்றை எரித்து பை மற்றும் சூட்கேசில் கொண்டு வந்து கோவளம் அருகே புதைத்து விட்டதாகவும், தனக்கு புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவரும், கோவளம் பூசாரி ஒருவரும் உடந்தையாக இருந்தனர் என்ற தகவலை போலீசாரிடம் தெரிவித்தார்.

பாக்கியலட்சுமியை போலீசார் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் பூசாரியும் மற்றொரு ஆசாமியும் தலைமறைவாகி விட்டனர். மேலும் கொலை நடந்த இடம் புதுக்கோட்டை என்பதால் யார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதில் போலீசார் இடையே இழுபறி ஏற்பட்டு வந்தது. பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவின் பேரில் பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் அமீர் அகமது தலைமையில் போலீசார் கோவளத்தில் சோதனை செய்து குளத்தில் இருந்த 2 மண்டை ஒடு உள்பட எலும்பு கூடு பார்சல்களை கைப்பற்றினார்கள். பின்னர் கொலை செய்த புதுக்கோட்டை அழகி பாக்கியலட்சுமியை கைது செய்த போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அவரை வருகிற 24ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். மேலும் தனிப்படை போலீசார் புதுக்கோட்டை விரைந்து உள்ளனர்.