ரயில்வே ஸ்டேஷனில் மொபைல் சார்ஜ் செய்ய சூப்பர் மிஷின்: பயணிகள் நிம்மதி

0
179

ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் மொபைல் சார்ஜ் செய்ய வேண்டுமென்றால் ஒரு இடத்தில் சார்ஜ் போட்டுவிட்டு அதன் பக்கத்திலேயே உட்கார்ந்து இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது இதில் மொபைல் திருடு போகவும் அதிக வாய்ப்பு உள்ளது

இந்த நிலையில் புனே ரயில்வே ஸ்டேஷனில் ஒரு டிஜிட்டல் சார்ஜிங் மிஷன் வைக்கப்பட்டுள்ளது இதில் நாம் மொபைலை சார்ஜ் செய்ய வேண்டுமென்று முடிவு செய்து விட்டால் அதிலுள்ள தொடுதிரையில் உள்ள ஆப்சன்களை பயன்படுத்தி ரூபாய் 10 மட்டும் கட்டணம் செலுத்தி ஒரு ரசீதைப் பெற்றுக் கொள்ளலாம்

அதன் பின்னர் அது இந்த மெஷினில் உள்ள ஒரு சிறிய அறை திறக்கும். அதில் நாம் மொபைலை இன்சர்ட் செய்துவிட்டு அதை மூடி விடலாம். அதன் பின்னர் ஒரு மணிநேரம் கழித்து நமக்கு வழங்கப்பட்ட பிரின்டிங் ரசீதில் உள்ள பார்கோடு காட்டினால் நமது மொபைல் இருக்கும் சிறிய அறை திறக்கும்.

நாம் சார்ஜ் செய்யப்பட்ட மொபைலை எடுத்துக்கொள்ளலாம் இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில் நாம் அந்த ரயில்வே நிலையத்தின் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் மொபைல் தொலைந்து விடும் என்ற அச்சம் ஒரு சதவீதம் கூட இருக்காது

இவ்வாறு பாதுகாப்பான முறையில் சார்ஜ் செய்ய டிஜிட்டல் மிஷினை வைத்துள்ளதற்கு பயணிகள் புனே ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர் இந்த மெஷின் விரைவில் சென்னை உள்பட அனைத்து நகரங்களுக்கும் கொண்டுவர வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleடாக்டர் என்னை இந்த பாம்புதான் கடித்தது! மருத்துவரை தெறிக்க விட்ட நோயாளி !
Next articleஇந்தியாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்! உ.பி.யில் தங்க மலைகள் கண்டுபிடிப்பு!! என்ன செய்ய போகிறது அரசு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here