ஆசையாய் சாப்பிட போகும் பொழுது சாப்பாட்டில் கரப்பான் பூச்சி! விஜய் சேதுபதி பட நடிகை புகார்!

0
72

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் உணவை ஆர்டர் செய்து சாப்பிட முயன்ற பொழுது அதில் கரப்பான் பூச்சியை கண்டு அதிர்ந்து உள்ளார். மேலும் பிரபல உணவகம் மீது நடிகை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஜெயம் ரவியுடன் tik.tik.tik விஜய் ஆண்டனியுடன் திமிருபிடிச்சவன் விஜய் சேதுபதியுடன் சங்கதமிழன் ஆகிய படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றார் . இப்பொழுது அவர் நடித்த பொன்மாணிக்கவேல் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.


இவர் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் சச்சரவை கிளப்பியுள்ளனர். அதில் ஆர்டர் செய்து டெலிவரியான சாப்பாட்டில் கரப்பான் பூச்சிக்கு கிடந்ததாக அதை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பிரபல உணவு விநியோகிக்கும் ஸ்விகி நிறுவனம் மூலம் ஆர்டர் செய்த சாப்பிட முயன்ற பொழுது அதில் கரப்பான் பூச்சி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு ஆதாரமாக கரப்பான் பூச்சியின் கிடந்த உணவையும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஷேர் செய்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.

மேலும் ஸ்விக்கி நிறுவனம் மற்றும் மற்ற உணவகங்கள் என்ன தரத்தை பின்பற்றுகின்றன என தெரியவில்லை. இதுவரை 2 முறை எனது உணவில் கரப்பான் பூச்சியை கண்டு எடுத்துள்ளேன். இத்தகைய உணவகங்களில் தினமும் சோதனை நடத்தி தரமாக இல்லை என்றால் அதிக அபராதம் விதிக்க வேண்டும். இந்தியா முழுவதும் சுசுகி நிறுவனம் உணவு டெலிவரி செய்து வரும் நிலையில் தங்களது செயலியில் தரமான உணவகங்களை இணைக்க வேண்டும் என்று தனது பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

author avatar
Kowsalya