மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு:! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு!

0
178

மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு:! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு!

தமிழகத்தில் சுமார் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன.அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஆண்டிற்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்படும்.இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சுங்கச்சாவடி கட்டணம் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி உயர்த்தப்படும் என்று போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த கட்டணத்திலிருந்து 5 அல்லது 10 சதவீதம் கட்டணத்தை உயரத்தி வசூலிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா முழு ஊரடங்கால் சுங்கச்சாவடிகளும் மூடப்பட்டிருந்த நிலையில்,சுங்கச்சாவடி கட்டணம் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி உயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.தற்போது மீண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படும் என்கிற தகவல்,ஓட்டுநர்கள் மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தால் அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் காய்கறிகளின் விலையும் உயர வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Previous articleவிநாயகர் சதுர்த்தி அன்று மஞ்சள் பிடித்த பிள்ளையாரை என்ன செய்ய வேண்டும்?
Next articleதமிழருக்கு கேல்ரத்னா விருது! என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here