கணவருக்கு வாய்ப்பு மறுப்பு! இனி அஜித் உடன் நடிக்க மாட்டாரா லேடி சூப்பர் ஸ்டார்? வெளிவந்த தகவல் 

0
327
#image_title

கணவருக்கு வாய்ப்பு மறுப்பு! இனி அஜித் உடன் நடிக்க மாட்டாரா லேடி சூப்பர் ஸ்டார்? வெளிவந்த தகவல்  

ஏகே 62 படத்தை இயக்க விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அஜித் மீது நயன்தாரா அதிருப்தியில் உள்ளார்.

தமிழில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அடுத்து விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய நானும் ரவுடிதான் என்ற படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்கினார். சென்றாண்டு காத்து வாக்குல ரெண்டு காதல் வெளியானது.

கடந்த மே மாதம் அஜித்தை வைத்து ஏகே62 என்ற படத்தை இயக்க கமிட் ஆகி இருந்தார். அஜித் படம் கிடைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற உற்சாகத்தில் 8 மாதங்கள் கழித்து தான் படத்தை இயக்கத் திட்டமிட்டு இருந்தார் விக்னேஷ் சிவன்.

கடவுள் அருளால் கனவுகள் அனைத்தும் நனவாகும். இப்படி ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி அஜித் சார். அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று விக்கி  சமூக  வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். 

இந்த 8 மாத இடைவெளியில் அஜித்தை வைத்து இயக்க ஸ்கிரிப்டுக்கு ஏகே 62 என தயார் செய்திருந்தார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் இந்த கதை அஜித்துக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பிடிக்கவில்லை என தெரிகிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே லைக்கா நிறுவனம் அதிலிருந்து விலகி உள்ளது. இதனால் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார் விக்னேஷ் சிவன்.

இதற்கு முன்பும் இதே போல் 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிக்க விக்னேஷ் சிவன் இயக்குவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அனிருத் இசையமைத்து 2020 இல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்தின் பட்ஜெட் அதிகரித்ததால் ரத்து செய்வதாக லைக்கா நிறுவனம் அறிவித்தது.

இதே நிலை தற்போது ஏகே62 படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. 200 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க லைக்கா திட்டமிட்டிருந்தது. ஆனால் விக்னேஷ் சிவன் கதை திருப்திகரமாக இல்லாததால் அவரை நீக்கிவிட்டு மகிழ் திருமேனியை டைரக்டராக்கி உள்ளனர்.  

தனது வலைதள பக்கத்தில் ஏகே 62 படத்தின் பதிவுகளை நீக்கிய விக்னேஷ் கவர் போட்டோவாக வைத்திருந்த அஜித்தின் படத்தையும் நீக்கியுள்ளார். இதனால் அஜித் படத்தில் விக்னேஷ் சிவன் இல்லை என்பது உறுதியானது.

அஜித்துக்கும் நயன்தாராவிற்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. இருவரும் மூன்று வெற்றி படங்களில் இணைந்து நடித்துள்ளனர். எனவே அஜித் சொல்வதைக் கேட்பார் என நயன்தாரா பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை.

தனது கணவருக்கு ஆசையை காட்டி ஏமாற்றி விட்டதால் அஜித் மீது கடும் அதிருப்தியில் உள்ளார் நயன்தாரா. இதனால் இனிமேல் எந்த  சூழ்நிலையிலும் அஜித்துடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்னேஷ் சிவனின் ஒருவரி கதையை கேட்டதும் அஜித்திற்கு பிடித்ததாகவும் பின்னர் முழு கதையும் கேட்ட பிறகு பிடிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இதனால் அவர் படத்தில் இருந்து விலகி உள்ளார். அஜித்தின் இந்த ஒரு வரி கதையை கேட்டு முடிவு செய்யும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால் நல்லா இருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர். தற்போது இந்த வரிசையில் நயன்தாராவின் அதிருப்தியும் சேர்ந்து கொண்டது.