குழந்தைகளுக்கு அடிக்கடி கிரைப் வாட்டர் கொடுப்பவர்கள் கவனத்திற்கு! உடனே இதை பாருங்க

0
122
#image_title

குழந்தைகளுக்கு அடிக்கடி கிரைப் வாட்டர் கொடுப்பவர்கள் கவனத்திற்கு! உடனே இதை பாருங்க

பிறந்த குழந்தைகள் முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கப்படுதிறது. பிறந்த குழந்தைகள் பசியாறிய பிறகும் சிணுங்கி கொண்டே இருந்தால், அது எதற்காக அழுகிறது என்பது நமக்கு தெரியாது. குழந்தைக்கு வயிற்று வலியா, செரிமான கோளாறா வேறு ஏதாவது உபாதைகளா என நம்மால் கண்டுபிடிக்க முடியாது.

இது போன்ற நேரங்களில் நாம் கிரைப் வாட்டரை குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். இதை கொடுப்பதால் உடல் உபாதைகள் நீங்கி குழந்தை நன்றாக உறங்கும். நமது பாட்டிமார்கள் எல்லாம் குழந்தைகளுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு கை வைத்தியம் செய்து வந்தனர்.

பிறகு தாய்மார்கள் குழந்தைகளின் எல்லாவித உபாதைகளுக்கு இந்த கிரைப் வாட்டரை கொடுத்தார்கள். ஆனால் இந்த கிரைப் வாட்டரை எந்த மருத்துவரும் பரிந்துரைப்பது இல்லை. இதில் ப்ரோனோபோல் என்ற நச்சு பொருள் இருப்பதால் குழ்ந்தைகளுக்கு உடலில் பல பிரச்சினைகள் உண்டாகும் என குழந்தைகள் நல மருத்துவர் அருண்பாபு திருநாவுக்கரசு கூறியுள்ளார்.

மேலும் கிரைப் வாட்டரை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வருவதால், உடல் எடை குறைதல், சிறுநீரக கோளாறு, புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று அதற்குரிய மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

author avatar
CineDesk