திமுக வேட்பாளருக்கு கொலைமிரட்டல்! கைது செய்யப்பட்ட அதிமுக முக்கிய பிரமுகரின் மகன்!

0
169
DMK candidate threatened with death Son of the arrested AIADMK leader!
DMK candidate threatened with death Son of the arrested AIADMK leader!

திமுக வேட்பாளருக்கு கொலைமிரட்டல்! கைது செய்யப்பட்ட அதிமுகவின் முக்கிய பிரமுகரின் மகன்!

தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.சாலைகளில் நடந்து வாக்குகளை சேகரிப்பதும்,நடக்கும் வேளையில் துப்புரவு பணியாளர்களிடமிருந்து துடப்பங்களை வாங்கி சாலைகளை பெருக்குவதும் இவர்கள் வாக்குகளை பெற செய்யும் அட்டூழியம் கொஞ்சம்நெஞ்சம் கிடையாது.

இந்நிலையில் அதிமுக பிரமுகரும் மாநகராட்சி ஒப்பந்ததாரருமான வடவள்ளி சந்திரசேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அனைவரும் மக்களை கவரும் வகையில் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர் ஆனால் இவர் மட்டும் ரௌடிதனமாக திமுக வேட்பாளர்களை மிரட்டியுள்ளார்.மேலும் அந்த வேட்பாளரை தகாத வார்த்தைகளால் திட்டியும்,அவர்களை கொலை செயத்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

அதனால் அவர் மீது போலீசார் கொலை மிரட்டலின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.திமுக வழக்கறிஞர்களின் சார்பில் தேர்தல் அலுவலரிடம் தந்த புகாரின் அடிப்படையில் கோவை போலீசார் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதேபோல் ஆலந்தூரில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் மகன் மூவேந்தேரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இவர் பணம் பட்டுவாடா செய்துள்ளதாக பரங்கிமலை காவல்நிலையத்தில் மூவேந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.