கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு! அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயிலில் அசத்தல் வேலை!

0
173
#image_title

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு! அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயிலில் அசத்தல் வேலை!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயிலில் “பரிசாரகர்” பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் உள்ள நபர்கள் இம்மாத இறுதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை – தமிழக அரசு வேலை

நிறுவனம் – அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயில்

பணி – பரிசாரகர்

காலியிடங்கள் – மொத்தம் 01

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனோடு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

18 முதல் 45 வயதுக்குள் இருக்கும் நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

மாத ஊதியம்

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.8,700/- முதல் ரூ.10,700/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

*நேர்காணல்

விண்ணப்பம் செய்யும் முறை – தபால் வழி

இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு அதனுடன் கேட்கப்படும் ஆவண நகலை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள் – 31.03.2024