உயிர் பிரியும் நேரத்தில் வாக்கு மூலம் கொடுத்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன்!!நெஞ்சை உருக்கும் பதில்கள்!..

0
121
Eighth grade school student who voted at the time of death!!Heart-melting answers!..
Eighth grade school student who voted at the time of death!!Heart-melting answers!..

உயிர் பிரியும் நேரத்தில் வாக்கு மூலம் கொடுத்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன்!!நெஞ்சை உருக்கும் பதில்கள்!..

காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் தான் ராஜேந்திரன் .இவரின் மகன் பால மணிகண்டன் .இவர் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான்.அப்பள்ளியில்  ஆண்டு விழா ஒத்திகையில் சக மாணவர்கள் அனைவரும் அப்பளிக்கு சென்றுள்ளார்கள்.

ஒத்திகை முடிந்ததும் மாணவன் வீடு திரும்பியுள்ளான்.வீட்டில் திடிரென்று மாணவன் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு  விழுந்துள்ளான்.இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அந்த மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் விஷம்  குடித்திருக்கிறான் என தெரிவித்தனர்.

இந்நிலையில் சிகிச்சையில் இருந்த மாணவன் அவரது உறவினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதில்  மாணவன்  மற்றும் உறவினர் பேசியதாவது,மாணவன் உன்னுடைய வீடு எங்குள்ளது? மாணவன் :வேட்டைக்காரன் வீதியில்

உறவினர் :உன் வீடு எங்குள்ளது?மாணவன்:ஹவுசிங் போர்டு.உறவினர் :அந்த மாணவியை பள்ளியில் வர வைத்து விசாரித்தார்களா?மாணவன்:தெரியலே  என பல கேள்விகளை கேட்டனர்.அந்த மாணவனும் உறவினர்கள் கேட்ட கேள்விகளுக்கு வரிசையாக பதிலளித்தார்.பின் இறுதி கேள்வியில் விஷம் கொடுத்தது சக மாணவர்களின் தாய் தான் என்று தெரிய கூறினார்.

எனக்கு விஷம் கொடுத்த  அவர்களை விரைவில்  தண்டிக்க வேண்டும் என மாணவன் கூறியிருந்தார்.இதை வாக்குமூலமாக எடுத்து கொண்ட அவர்கள் உரிய தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.வாக்கு மூலம் அளித்த மாணவன் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

author avatar
Parthipan K