10 மாதங்கள் புதைக்கப்பட்ட இளைஞரின் உடல் மீண்டும் தோண்டியெடுப்பு!

0
65
Excavation of the body of a young man buried for 10 months!
Excavation of the body of a young man buried for 10 months!

10 மாதங்கள் புதைக்கப்பட்ட இளைஞரின் உடல் மீண்டும் தோண்டியெடுப்பு!

ராமேஸ்வரம் சின்னவன் பிள்ளை என்னும் தெருவைச் சேர்ந்தவர் மணிராஜ்.இவருடைய மகன் கணேசன் வயது 19 இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஆட்டோ ஓட்டுனராகப் பணிபுரிந்து வருகிறார்.இவரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பாகக் காணவில்லை,அவர் வீட்டில் இருந்தபோது அவரது நண்பர்கள் வந்து அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை காணாமல் போன அவரை குறித்து உறவினர்கள் தேடிருக்கிறார்கள் ஆனால் கிடைக்கவில்லை.

அவருடைய தாத்தா சுரேஷ் என்பவர் ராமஸ்வரம் நகர காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.நகர காவல் துறையினர் தேடிய நிலையில் கண்டுபிடிக்க முடியவில்லை அவருடைய நண்பர்களை பிடித்து நகர காவல்நிலைய போலீசார் விசாரணை செய்யும் போது முழுமையான தகவல்கள்,ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தாத்தா சுரேஷ் ராமேஸ்வரம் டிஎஸ்பி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனையடுத்து.தாத்தா ரமேஷ் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் தெரிவித்திருக்கிறார்.

அதன் அடிப்படையில்தான் காணாமல் போன நபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது இதனை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமல் போன கணேசனின் நண்பர்களை பிடித்து விசாரணை செய்யும் போதுதான் அவர்கள் தங்களுக்குள் உள்ள போட்டி காரணமாக தான் கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து நண்பர்கள் நான்கு பேரையும் பிடித்து விசாரணை செய்து தற்போது இரண்டு நபர்களை கொண்டு அவர் புதைக்கப்பட்ட இடத்தில் நேரில் காட்ட வைத்தனர். தற்போது உடலைத் தேடி எடுக்கும் பணி நடந்து வருகிறது, இச்சம்பவம் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.