நல்லவேளை கொரோனா வந்து காப்பாத்திருச்சு!! கைது செய்வதில் இருந்து தப்பித்த சினிமா பிரபலம்!!

0
82

திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா தொற்றால் பாதிக்கப்பட்டதால், பணமோசடி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தும், அது வரை அவரை கைது செய்யக் கூடாது எனவும் சென்னை உச்ச நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரில், பஜார் காவல் நிலை போலீசார் ரூ. 300 வரை மோசடி நடந்து வழக்கு வழக்கப்படி வழக்கு பதிந்தனர்.

இது தொடர்பாக நீதி மணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு தொடர்பு  இருப்பது தெரியவந்தது.

எனவே தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் அந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்த நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில் மனுதாரர் போலீசார் கூறியபடி ஆகஸ்ட் 10 மற்றும் 12-ம் தேதிக்கு விசாரணைக்கு ஆஜராக வில்லை என தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் வாதிடுகையில் ஆகஸ்ட் 7 மற்றும் 8ம் தேதிகளில் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் ஆஜராகி 66 கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இதை தொடர்ந்து அவரை 120 ஆகஸ்ட் 8ம் தேதி உறுதியானது.இது குறித்து பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தோற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவரை கைது செய்ய கூடாது என உத்தரவிட்டார்.

author avatar
Parthipan K