ஒரு நிமிஷம் நில்லுங்க! குஷ்புவிடம் அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பிய சிறுமி! வைரல் வீடியோ

0
112
Kushboo
Kushboo

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து தேர்தல் திருவிழா களைக்கட்டி வருகிறது. வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல் எல்லாம் முடிந்து, பிரசாரம், வாக்கு சேகரிப்பு என திரும்பிய திசைகளில் எல்லாம் கோலாகலமாக காணப்படுகிறது. இந்த முறை எப்படியாவது தனது கட்சி சார்பில் எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுப்பிவிட வேண்டும் என்பதில் தமிழக பாஜக தீவிரமாக உள்ளது. அதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் பட்டியலில் மக்களுக்கு நன்கு அறிமுகமான, பொதுதளத்தில் செயல்பட்ட நட்சத்திர வேட்பாளர்களை களமிறங்கியுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இணைந்த நடிகை குஷ்புவிற்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளில் இருந்தே குஷ்பு அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திமுக, காங்கிரஸில் இருந்த போது குஷ்புவின் அரசியல் செயல்பாடுகளை பெரிதாக கண்டுகொள்ளாத சுந்தர் சி, முதன் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தன்னுடைய மனைவிக்காக ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால் தினந்தோறும் வீடு, வீடாக சென்று அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வந்த குஷ்பு, தற்போது ஆயிரம் விளக்கு பகுதி மக்களுக்காகவே மினி தேர்தல் அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் ஏழை குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தையின் பெயரில் ரூ.1 லட்சம் டெபாசிட், 8-ம் வகுப்பு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக டேப்லெட், இஸ்லாமிய பெண்கள் வீட்டிலிருந்த படியே தொழில் செய்து முன்னேற நடவடிக்கை என பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே குஷ்புவிற்கு ஆயிரம் விளக்கில் பெண்கள் சப்போர்ட் அதிகமிருந்த நிலையில், இந்த வாக்குறுதிகளை எல்லாம் அறிவித்த பின்னர் அது டபுளாக மா

இந்நிலையில் நேற்று குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார். அப்போது வாக்கு கேட்க வந்த குஷ்புவிடம், மாணவி ஒருவர் ஆங்கிலத்தில் கேள்வி கணைகளை தொடுக்க, அதற்கு குஷ்புவும் சிறுமி தானே என அலட்சியம் செய்யாமல் பொறுப்பாக பதிலளிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ‘உங்க கிட்ட இருந்து எங்க தொகுதிக்கு என்ன மாதிரியான பிரத்யேகமாக என்ன மாதிரியான வாக்குறுதிகளை எதிர்பார்க்கலாம். தேர்தல் நேரத்தில் மட்டுமே எல்லாருக்கும் இந்த தொகுதி தெரியுது. தேர்தல் முடிஞ்சிட்டால் ஆயிரம் விளக்கு தொகுதியா? அது எங்க இருக்கு என கேட்குறாங்க. அதனால் தான் கேட்கிறேன், இந்த ஏரியாவிற்காக நீங்கள் என்ன செய்யப்போகிறார்கள்  என கேள்வி எழுப்பினர்.

சிறுமி பேசுவதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த குஷ்பு, ‘இந்த ஏரியா எனக்கு நன்கு பரிட்சியல் ஆனது தான். என் குழந்தைகள் இங்குள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் தான் படிக்கிறார்கள். இந்த ஏரியாவில் சுனாமி, வெள்ளம் போன்ற பாதிப்புகள் வந்த போது உதவிகள் செய்துள்ளேன். எங்க அம்மா சொல்லிக்கொடுத்திருக்காங்க வலது கை கொடுக்குறது, இடது கைக்கு தெரியக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. அதை பின்பற்றி சென்னை வெள்ளத்தின் போது இந்த பகுதி மக்களுக்கு 21 நாட்கள் உணவு கொடுத்திருக்கிறேன். அதை எல்லாம் நான் பப்ளிசிட்டி செய்தது கிடையாது.

உங்களுக்கே தெரியும் நான் இந்த முறை தான் முதன் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் உறுதியளிக்கிறேன், மற்ற அரசியல்வாதிகளைப் போல் தேர்தல் நேரத்தில் மட்டுமே வந்து செல்லமாட்டேன். அவர்கள் தவறான முன் உதாரணத்தை உருவாக்கியுள்ளார்கள். உங்களுக்கு என்னிடம் கேள்வி கேட்க அனைத்து உரிமையும் உள்ளது எனக்கூறி சிறுமியை பாராட்டினார். இதோ அந்த வீடியோ…

 

author avatar
CineDesk