கனமழை காரணமாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை.!!

0
119

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகர கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் நவம்பர் 3ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும். மேலும், ஒரு சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நேற்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று கனமழை காரணமாக கடலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.