சமூக ஆர்வலரின் மோசமான மறுபக்கம்! பெண்ணை தாக்கி மிரட்டியதால் போலீசில் புகார்! ( வீடியோ )

0
233

சமூக ஆர்வலரின் மோசமான மறுபக்கம்! பெண்ணை தாக்கி மிரட்டியதால் போலீசில் புகார்! ( வீடியோ )

இயற்கை ஆர்வலர் பியுஷ் மனுஷ் மீது வாடகை தராமல், வீட்டு ஓனரை தாக்கியதாக காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் இயற்கை எதிராக நடக்கும் சம்பவங்களில் களத்தில் குரல் கொடுத்து வருபவர் பியுஸ். ஏரிகளை தூர்வாறுதல், கிணுறுகளை சீரமைத்தல், சாக்கடை கால்வாய்களை சுத்தப்படுத்துதல் போன்ற பல்வேறு சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சமூக வலைத் தளங்களில் பிரபலமாக இருக்கும் பியுஸ், தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வாடகை தராமல் வம்பிழுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இவர் மீது ஏற்கனவே சில சர்ச்சையான நிகழ்வுகள் நடந்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டில் பாஜக அலுவலகத்தில் சென்று ஆர்வகோளாறால் அடிவாங்கிய சம்பவமும் உண்டு. முன்பு அரசின் திட்டத்திற்கு எதிராக போராடியதால் சிறையில் வைத்து அடித்த சம்பவம், நாகர்கோவில் போத்தீஸ் புதிய கிளையை திறந்தபோது கடைக்கு முன்பு இருந்த மரம் வெட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை பெரிதுபடுத்தாமல் இருக்க 10 லட்சம் பணம் வாங்கியதாகவும் சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், பியுஷ் மானுஷ் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் குடும்பத்தோடு புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. புகாரில், வீட்டு வாடகை கேட்டால் தரமறுத்ததுடன் வீட்டு ஓனரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் “அட மானங்கெட்டவனுங்களா இதுக்கு எதுக்குடா சமூக ஆர்வலர்னு சுத்திட்டு இருக்கீங்க’ என்று நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

Previous articleமகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை! மீண்டும் மறக்காமல் கவனத்துடன் பதிவு செய்த டிரம்ப்..!
Next articleதமிழகத்தை சேர்ந்த 6 எம்பிக்களின் பதவி காலி! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here