கறி மசால் தூள் இப்படி அரைத்து பயன்படுத்தினால் கறிக்குழம்பு மணக்கும்!!

0
25
#image_title

கறி மசால் தூள் இப்படி அரைத்து பயன்படுத்தினால் கறிக்குழம்பு மணக்கும்!!

கறிக்குழம்பு,உருளைக்கிழங்கு,முட்டை,குருமா உள்ளிட்ட பல்வேறு உணவுகளின் ருசியை கூட்டுவதில் கறி மசால் தூளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இந்த கறி மசால் துளை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் தயாரித்து சமையல்களில் சேர்த்து வந்தோம் என்றால் உணவு மணமாகவும் இருக்கும்,உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கமகமக்கும் கறிமசால் தூள் செய்யும் முறை:

தேவையான பொருட்கள்:-

*எண்ணெய் – 1/2 தேக்கரண்டி

*கொத்தமல்லி விதை – 1 1/2 கப்

*வர மிளகாய் – 20 முதல் 25

*கருப்பு மிளகு – 6 தேக்கரண்டி

*சீரகம் – 6 தேக்கரண்டி

* சோம்பு – 1 தேக்கரண்டி

*கடலை பருப்பு – 3 தேக்கரண்டி

*புழுங்கல் அரிசி – 1 தேக்கரண்டி

*பட்டை – 8 துண்டு

*இலவங்கம் – 12 முதல் 14

*ஏலக்காய் – 3

*கசகசா – 3 தேக்கரண்டி

*உளுந்து பருப்பு – 1 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 6 கொத்து

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*கல் உப்பு – 1 தேக்கரண்டி

செய்முறை:

1.அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் மிதமான தீயில் 25 வர மிளகாய் போட்டு வறுக்கவும்.வர மிளகாய் கருகி போகாமல் மொறு மொறுப்பாக வரும் வரை வறுத்து கொள்ளுங்கள்.இதை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

2.அடுத்து கடாயில் கொத்தமல்லி விதை 1 1/2 கப் சேர்த்து வாசனை வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ளவும்.பின்னர் இதை வரமிளகாய் தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

3.பிறகு கடாயில் கருப்பு மிளகு 6 தேக்கரண்டி சேர்த்து நன்கு வறுத்து ஏற்கனவே வறுத்த பொருட்களுடன் சேர்த்துக் கொள்ளவும்.

4.அடுத்து சீரகம்,சோம்பு இரண்டையும் கடாயில் சேர்த்து பொரிந்து வரும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.ஏற்கனவே வறுத்த பொருட்களுடன் இதை சேர்த்துக் கொள்ளவும்.

5.பின்னர் கடை கடலைப் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறத்துடன் வாசனை வரும் வரை நன்றாக வறுக்கவும்.ஏற்கனவே வறுத்த பொருட்களுடன் இதை சேர்த்துக் கொள்ளவும்.

6.பிறகு 1 தேக்கரண்டி புழுங்கல் அரிசி போட்டு பொரியவிட்டு அதையும் ஏற்கனவே வறுத்த பொருட்களுடன் சேர்த்து கொள்ளவும்.

7.அதன் பின்னர் பட்டை,இலவங்கம்,கசகசா,ஏலக்காய்,கருவேப்பிலை உள்ளிட்டவற்றை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.அதன் பின் அடுப்பை அணைத்து கடாய் சூட்டில் கல் உப்பு 1 தேக்கரண்டி போட்டு வறுத்தெடுக்கவும்.பின்னர் வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் நன்கு ஆறவிடவும்.

8.அவை ஆறியப்பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் குழம்புக்கு உபயோகிக்கும் மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

9.பின்னர் அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு தட்டில் கொட்டி ஆற விட வேண்டும்.பின்னர் இதை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து கொள்ளவும்.கறிமசால் தூள் இந்த முறையில் செய்தால் குழம்பு மிகவும் சுவையாகவும்,அதிக வாசனையுடனும் இருக்கும்.