இங்கு முகக் கவசம் அணியாமல் பயணம் செய்தால் ரூ. 200 அபராதம்!

0
81

மெட்ரோ ரயிலில் முக கவசம் அணியாமல் பயணம் செய்வோருக்கு ரூ 200 அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவை ஒரு மாதத்திற்கு பின்பு ஊரடங்கு முடிந்த பின்னர் இருபத்தி ஒன்றாம் தேதியிலிருந்து தொடங்கியது. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே ஐந்து நிமிடத்திற்கு ஒரு சேவையும், மற்ற நேரங்களில் பத்து நிமிடத்திற்கு ஒரு சேவையும் அளிக்கப்படுகிறது.

ஊரடங்கு விதிக்கப்பட்ட முறையின் படி 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் குளிர்சாதன வசதி, ரயில் நிலையங்களில் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் குறைந்த அளவிலேயே மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். அரசு அலுவலகங்கள் மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் மட்டுமே அதிக அளவு பயணம் செய்கிறார்கள்.
முதல் நாளில் 29 ஆயிரம் பேர் பயணம் செய்தனர் . அதன் எண்ணிக்கை 34 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதேபோல பஸ் விமான நிலையங்களில் அதிக அளவு பயணிகள் பயணம் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆலந்தூர் திருமங்கலம் விம்கோ நகர் நிலையங்களிலும் பொதுமக்களை நிறையவே காண முடிந்தது. மூன்றாவது நாளாக மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதனால் மக்கள் ஒரு சிலர் மேம்போக்காக முககவசம் அணியாமலும் பயணம் செய்கிறார்கள்.
இதனை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ரயிலில் முக கவசம் அணியாமல் பயணம் செய்வோருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

author avatar
Kowsalya