சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இதனை 1 கிளாஸ் குடித்தால் போதும்!!

0
222

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இதனை 1 கிளாஸ் குடித்தால் போதும்!!

பலருக்கும் நீரிழிவு நோய் இருப்பதால் பெரிதும் அவதிப்பட்டு வருவர். குறிப்பாக நீரிழிவு நோயால் இன்சுலின் எடுப்பவர்களும் உண்டு. மேலும் சர்க்கரை உள்ளவர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அது வெகு சீக்கிரமாக ஆறாது.அதற்கு எப்பொழுதும்  சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனே வைத்திருப்பது அவசியம்.

அந்த வகையில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு குறிப்பு மூலம் தயாரிக்கப்படும் பானத்தை ஒரு கிளாஸ் குடித்தால் போதும். சர்க்கரை அளவானது வாழ்நாள் முழுவதும் கட்டுப்படுத்த இதனை பின்பற்றலாம்.

இந்த பானத்தை குடிப்பதால் சர்க்கரை கட்டுக்குள் இருப்பதோடு செரிமான தொடர்பான பிரச்சனைகள் சரியாவதோடு வயிறு உப்பசம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.தினந்தோறும் இதனை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

புதினா

ஓமம்

செய்முறை:

சிறிதளவு புதினாவை எடுத்து அதனை நன்றாக தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.

தண்ணீர் நன்றாக சூடேறியதும் எடுத்து வைத்துள்ள ஒரு கைப்பிடி அளவு புதினாவை சேர்க்க வேண்டும்.

அதனுடன் சிறிதளவு ஓமத்தை சேர்க்க வேண்டும்.

பின்பு நன்றாக தண்ணீர் கொதித்து அரை கிளாஸ் அளவிற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பின்பு வெதுவெதுப்பான சூட்டில் தினம்தோறும் காலை நேரத்தில் குடித்து வர சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

மேலும் அஜீரணக் கோளாறு வயிறு உப்பசம் உள்ளிட்ட பிரச்சனைகளும் நிவர்த்தி அடையும்.

Previous articleதொடர் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்.. தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய மருத்துவர் அன்புமணி..!
Next articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here