கேரளா ஸ்டைல் பூசணி கூட்டு கறி – செய்வது எப்படி?

0
132
#image_title

கேரளா ஸ்டைல் பூசணி கூட்டு கறி – செய்வது எப்படி?

புட்டு, இடியாப்பம், கடலை கறி, அவியல் உள்ளிட்ட பிரபல கேரள உணவு வரிசையில் இருப்பது பூசணி காய் கூட்டு . பூசணிக்காய் மற்றும் பச்சை வாழைக்காய் வைத்து சமைக்கப்படும் இந்த உணவை உண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*பூசணிக்காய் – 1 கப்

*தேங்காய் துருவல் – 1/2 கப்

*வாழைக்காய் – 1

*புளிப்புத் தயிர் – 1 கப்

*பச்சை மிளகாய் – 4

*கடுகு – 1 தேக்கரண்டி

*தேங்காய் எண்ணெய் – 2 முதல் 3 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

சிறிதளவு பூசணிக்காய் காய் மற்றும் ஒரு வாழைக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து நறுக்கி வைத்துள்ள காய்கறி துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

பின்னர் 1/2 மூடி தேங்காயை துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் 1/2 கப், 4 பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மைய்ய அரைக்கவும்.

இதை வெந்து கொண்டிருக்கும் காயில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு 1 கப் புளிப்பு தயிரை கடைந்து அதில் சேர்த்து கலந்து விடவும். இவை கொதித்து நுரை வந்தவுடன் இறக்கவும்.

அடுத்து அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து அதில் 2 முதல் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் 1 தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிய விடவும். பின்னர் அடுப்பை அணைத்து இந்த தாளிப்பை தயார் செய்து வைத்துள்ள காய்கறி கலவையில் சேர்த்து கொள்ளவும். இவ்வாறு செய்தால் பூசணி கூட்டு கறி அதிக மணம் மற்றும் சுவையுடன் இருக்கும்.