ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு!! உடற்பயிற்சி கூடங்கள் மட்டும் திறக்க அனுமதி!

0
47

கோவா மாநிலத்தில், ஜூலை 19ஆம் தேதி வரை அம்மாநில அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. இருப்பினும், உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க அனுமதி போன்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

மேலும், தினசரி கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகின்றன. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். அதேசமயம் முழுமையாக தளர்த்தவில்லை.

கோவாவில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு இம்மாதம் 19ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உள்ளது. அதே சமயம், சில தளர்வுகள் அந்த மாநில அரசு அறிவித்து உள்ளது. உடற்பயிற்சி கூடங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. மேலும், 50 சதவீத திறனில் மட்டும் இயங்கினால் இயங்கலாம் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

விளையாட்டு அரங்கங்களை பார்வையாளர்கள் இல்லாமல் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. அதை அடுத்து, மாநிலத்தில் கடைகள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை திறக்க அனுமதி கிடையாது.ஸ்பா ஆகியவை செயல்பட தடை விதித்துள்ளது.

பள்ளிகள் மற்றும் திரையரங்குகள், பொழுதுபோக்கு மண்டலங்கள் திறப்பதற்கான தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்கள் அதற்கான ஆதாரங்களுடன் வரவேண்டும் என்று அறிவித்துள்ளது. பஸ்கள் 50% இருக்கை திறனுடன் மட்டுமே இயங்கலாம் போன்ற தளர்வுகளை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

author avatar
Jayachithra