செல்போனுக்கு தாலி கட்டி குடும்பம் நடத்தும் வாலிபர் : ச்சே ஊரடங்கில் இந்த அலப்பறை வேறயாடா என கலாய்க்கும் இளசுகள்..!!

0
75

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதி ஜங்கனசேரியை சேர்ந்த ஸ்ரீஜித்து என்ற 30 வயதான வாலிபர் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அஞ்சனா என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது, அதில் வரும் ஏப்ரல் 26ம் தேதி என்று திருமண தேதி குறிக்கப்பட்டது.

இதற்கு இடையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியோடு முடிந்துவிடும் என்று எதிர்பார்த்த வேளையில் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

முன்னதாக மணப்பெண் உத்திர பிரதேசத்தில் ஐடி கம்பெனி ஊழியராக பணியாற்றி வந்ததால் அரசின் உத்தரவை மீறி திருமணத்திற்கு சரியான நேரத்தில் வரமுடியவில்லை. இதனால் உறவினர்கள் கூடி மணமக்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே நிச்சயித்த தேதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

பொதுவாக கேரள மாநிலத்தில் திருமணம் என்றால் வெகு விமரிசையாக கேரள மேளம், விதவிதமான உணவுடன் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த திருமணத்திற்கு எந்த ஏற்பாடும் இல்லாமல் அவரவர் வீட்டில் மணமகள் மற்றும் மணமகன் தயாராய் இருந்தனர்.

மணமக்கள் மற்றும் உறவினர்களை இணைக்கும் விதமாக அனைவரும் வாட்ஸ்அப் வீடியோ காலில் இணைந்து கொண்டனர். கேரளாவில் மணமகன் ஸ்ரீஜித் தான் வைத்திருந்த தாலியை செல்போனுக்கு மாட்டினார், அதே நேரத்தில் அஞ்சனா தான் வைத்திருந்த தங்க தாலியை தன்னுடைய கழுத்தில் மாட்டிக்கொண்டார்.

இது ஒரு பக்கம் இருக்க இந்த திருமணத்தை பற்றி தெரிந்து கொண்ட நெட்டிசன்கள் அட ச்சே ஊரடங்கில் இந்த அலப்பறை வேறயாடா எனறு கலாய்த்தனர். என்ன தான் திருமணம் நடந்து முடிந்தாலும் ஊரடங்கு முடியும் வரை மணமகன் செல்போனோடு தான் குடும்பம் நடத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K