1000 ஊழியர்களை திடீரென்று பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட் நிறுவனம் காரணம் என்ன?

0
231

Flipkart மற்றும் snap உள்ளிட்ட நிறுவனங்களைத் தொடர்ந்து முக்கிய நிறுவனமான மைக்ரோசாப்ட் சத்தம் இல்லாமல் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. மைக்ரோ சாப்ட் தன்னுடைய நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளின் பல நாடுகளில் பணியாற்றி வந்த சுமார் 1000 ஊழியர்களை சமீப நாட்களில் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

சமீபத்திய அறிக்கையின் படி மைக்ரோசாப்ட் அனைத்து நாடுகளிலும் இருக்கின்ற குழுக்களிலிருந்து சற்றேற குறைய 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதன் மூலமாக மைக்ரோசாப்ட் தன்னுடைய 3வது சுற்று பணி நீக்கத்தை செயல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அல்லது அவர்களை நண்பர்களாக கொண்டவர்கள் சமூக வலைதளத்தில் இந்த செய்தியை பகிர்ந்து வந்ததைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் இது தொடர்பான விவாதம் இருந்தது.

இதற்கு நடவடி மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் செய்துள்ள பணி நீக்கங்களில் சரியான எண்ணிக்கையை வெளியிடவில்லை என்றாலும் Axiosஸின் அமெரிக்க செய்தி அறிக்கை சுமார் ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கை கடந்த ஜூலை மாதமே நிறுவனத்தால் திட்டமிடப்பட்டதாக தகவல் மேலும் தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு இடையில் ஊழியர்களை குறைக்கும் அல்லது பணியமத்துவதை மெதுவாக்கும் செயல்முறையை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் கையில் எடுத்திருக்கின்றன உலகளாவிய பொருளாதார மந்த நிலை அதிகரித்து வரும் பண வீக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே meta platforms,Inc,Twitter Inc மற்றும் snap inc ஒரு லிட்டர் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்திய மாதங்களில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன குறிப்பாக மெட்டா நிறுவனம் படிப்படியாக சுமார் 12,000 பேரை குறைக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கு நடுவே அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட axiosnews செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுவனங்களைப் போலவே நாங்கள் எங்களுடைய வணிக முன்னுரிமைகளை ஒரு வழக்கமான அடிப்படையில் மதிப்பீடு செய்து அதற்கேற்றவாறு கட்டமைப்பு மாற்றங்களை செய்கிறோம் நாங்கள் எங்களுடைய வணிகத்தில் தொடர்ந்து முதலீடு செய்வோம் மற்றும் எதிர் வரும் ஆண்டில் முக்கிய வளர்ச்சி பகுதிகளில் பணியமத்துவோம் என்று கூறி இருக்கிறது.

அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியமர்த்தல் செயல்முறையை முடக்கி ஊழியர்களையும் பணிநீக்கம் செய்து வருகின்றன. இன்போசிஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, intel, google உள்ளிட்ட ஐடி ஜாம்பவான்களும் கூட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதில் மூண் லைட்டிங் காரணமாக சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டாலும் தொழில்நுட்ப நிறுவனங்களும் மற்ற நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

அதேபோன்று கடந்த மாதம் ஊழியர்களுடன் வாராந்திர கேள்வி பதில் அமர்வின் போது மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தங்களது நிறுவனமான பெரும்பான்மையான குழுக்களின் செலவினங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதை வெளிப்படுத்தினார்.