இவர் நினைத்தால் திமுக பஸ்பம் ! மோடி இஸ் ஹவர் டாடி! அமைச்சர் பேச்சு!

0
96

மோடி நினைத்தால் திமுக இருக்காது. என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவை யார் வழிநடத்த போகிறார் என்ற ஐயம் அனைத்து அதிமுக தொண்டரிடத்தில் இருந்த எண்ணம். பின்பு பன்னீர்செல்வம் முதல்வராக ஆனார். பின்பு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்பில் உள்ளார்.

ராஜேந்திர பாலாஜி பேசியதாவது அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடிதான் எங்கள் டாடி. இந்தியாவின் டாடி என சொன்ன பிஜேபியின் தீவிர விசுவாசியை ஓரங்கட்டிவிட்டு மோடியின் முரட்டு பக்தனாக இருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மோடி நெனச்சால் திமுக பஸ்பம் ஆகிவிடும். நாங்க நெனச்சா திமுக என்ற ஒரு கட்சியே இருக்காது என செம தில்லா சவால் விட்டுள்ளார்.

நேற்று தேனியில் வீரபாண்டி என்னும் இடத்தில் தினகரன் கட்சியிலிருந்து திமுகவுக்கு தங்க தமிழ்செல்வன் தலைமையில் அமமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், இங்கு வந்து சேர்ந்து இருக்கக்கூடிய தங்க தமிழ்ச்செல்வனை மட்டுமல்ல, உங்களை மட்டுமல்ல உண்மையாக அதிமுகவிற்காக இன்றைக்கும் உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த உண்மை விசுவாசிகள் தொண்டர்கள் அதிமுகவில் இருப்பது நியாயமல்ல, நீங்க இருக்கவேண்டிய இடம், உங்களுடைய இயக்கம் தாய்க்கழகம் திராவிட இயக்கமாக இருக்கக்கூடிய திமுக தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

இதற்கு பதிலடியாக ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்க சொல்லுகிறோம். ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக தொண்டர்கள் அத்தனை பேரும் அதிமுகவில் வந்து இணைய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

எனவே அண்ணா தலைமையில் இருந்த திமுகவில் பணியாற்றிய, அண்ணா தலைமையை ஏற்றுக்கொண்ட திமுக தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் மொத்தமா அதிமுகவுக்கு வரணும். அதிமுக தொண்டர்கள் ஒருத்தவங்க கூட அங்கே போகமாட்டாங்க. ஆண்டிபட்டி தங்க தமிழ்செல்வன், கரூர் செந்தில் பாலாஜி போனா எல்லோரும் போய் விட மாட்டார்கள்… என்னமோ சொன்னாரு டெல்லிக்கு 37 எம்.பி.க்கள் போகிறோம்… பார்லிமெண்டையே முடக்கிவிடு விடுவோம். மோடியை தடுத்துவிடுவோம்ன்னு. இந்த ஆட்சியை உண்டு இல்லை என ஆக்கிடுவோம்ன்னு சொன்னாரு திமுக தலைவர் ஸ்டாலின்.

மேலும் பேசிய ராஜேந்திர பாலாஜி மோடி நெனச்சா திமுக பஸ்பம் ஆகிடும். நாங்க நெனச்சா திமுக என்கிற கட்சியே இருக்காது. அந்த அளவுக்கு வலு இருக்கிறது. இந்த நாட்டினுடைய பிரதமரை முன் மொழியக் கூடிய இடத்தில் முதல்வர் பழனிசாமி இருக்கிறார். ஜனாதிபதியிடம் பிரதமர் வேட்பாளர் யார் என்று பட்டியல் கொடுத்ததில் ஒருவராக சென்றவர் அண்ணன் பழனிசாமி என பேசினார்.

நேற்றைய முன்தினம் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கோவை விமான நிலையத்தில் திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்றது என்றார். இதற்கு பதிலடியாக திமுக தலைவர் ஸ்டாலின் தேனியில் உறுப்பினர் சேர்க்கை விழாவின் போது நாங்கள் பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றி வெற்றி பெற்றோம் என்றால் அதிமுக என்ன அல்வா கொடுத்தா வெற்றி பெற்றது என்றார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாங்கள் நினைத்தால் திமுக இல்லாமல் போகும். மோடி நினைத்தால் திமுக பஸ்பம் ஆகி விடும் என்றார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K