முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேலின் பெருமை!

0
234

கந்தபுராணத்தில் முருகன் கையில் இருக்கும் வேல் மகத்துவம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினை புகழ்ந்து கூறியிருப்பத்துடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளை தெளிவுபடுத்துகின்றது. ஆகவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டை தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறை பொருளாக அமைந்துள்ளது.

வேல் விடுமுனையோடு திறல் வேலன், வேல் கொண்டன்று பொருத வீரன், துங்க வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெரித்திட விடும் வேலன் என்று பலவாறாக முருகனை புகழ்ந்துரைக்கும் அருணகிரியார் காலம் முதல் முருகனது வேல் புதிய காலத்தில் செல்வாக்கு பெற்று பரவலாயிற்று, ஆழ்ந்த முருக பக்தரான அருணகிரி யார் பாடிய வேல் வகுப்பு, வேல் விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

வேலின் தன்மைகளை உயர்வு படுத்தி காட்டிய அருணகிரிநாதர் வேரின் சக்திக்கு தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார். வேலை பற்றி தனித்தனியாக பாடிய ஒரே மிருக பக்தரும் புலவருமான அருணகிரியார் வேலானது இருளினை அகற்றக் கூடிய சுடரொளிகளான தீ, சூரியன் மற்றும் சந்திரன் உள்ளிட்ட இயற்கை சக்திகளை விளக்கக்கூடிய குறியீடு என்று குறிப்பிட்டுள்ளார்.

வேர்க்கோட்டம் என்ற சொல்லாட்சி ஆனது தமிழகத்தில் முருகனை சுட்டிக்காட்ட கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதை தெளிவு படுத்துகின்றது இன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் இருக்கின்ற திருப்பத்தூர், கோவை மாவட்டத்தில் இருக்கின்ற பூராண்டான் பாளையம், மதுரை மாவட்டத்தில் பசுமலை அருகில் உள்ள குமரகம் உள்ளிட்ட இடங்களில் வேல் ஒன்றே நட்டு வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் தளங்களில் இருக்கின்ற முருகன் ஆலய கோபுரங்களில் பெரிய அளவில் வேல் வடிவ சுடர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளனர். அவை வெகு தொலைவு வரையில் முருகன் கோவிலில் இருப்பிடத்தை சுட்டிக் காட்டுகின்றன.

அதோடு தமிழகத்தில் இருக்கின்ற முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை. இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தை குறிப்பிடுவதாக இருக்கின்றன.

தமிழகத்தில் சுந்தரவேல், சக்திவேல், கதிர்வேல், கனகவேல், வடிவேல், குமரவேல், கந்தவேல், ஞானவேல், வேலப்பன், வேலுச்சாமி, வேலன், வேலாயுதம் உள்ளிட்ட பெயர்கள் ஆண்களுக்கு அதிகமாக சூட்டப்பட்டுள்ளதை பார்க்கும்போது வேலின் பெருமையை உணரலாம்.

பிரணவப் பொருள் தான் என்ன? பிற என்றால் விசேஷமானது. நவம் என்றால் புதுமை அனுபவம் மிக்க புத்தம் புது விசேஷ உரிமைகளை உணர்த்துவது பிர+நவம் பிரணவம் என்றும் வாடாமல் கலந்தால் தேயாமல் எப்போதும் புதுமையாகவே இருக்கும் ஆன்ம தத்துவம் தான் பிரணவம்