‘ராஜா ராணி’ ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜெய்- நயன்தாரா…. வெளியான தகவல்!

0
119

‘ராஜா ராணி’ ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜெய்- நயன்தாரா…. வெளியான தகவல்!

நயன்தாராவின் 75 ஆவது படம் பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர முக்கிய காரணமாக இருந்தது நானும் ரவுடி தான் படம். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

திருமணத்துக்குப் பிறகு இப்போதும் நயன்தாரா வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல புதுப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிரார். அந்தவகையில் அவர் அடுத்து நயன்தாரா, ஜெய் மற்றும் சத்தியராஜ் ஆகியோரோடு இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அட்லியின் உதவியாளர் இயக்க உள்ளாராம். மேலும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் நயன்தாராவின் 75 ஆவது படமாக அமையும் என சொல்லப்படுகிறது.

ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகிய இருவரும் நயன்தாராவோடு ‘ராஜா ராணி’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தகக்து. ராஜா ராணி திரைப்படம் நயன்தாராவுக்கு ஒரு ரி எண்ட்ரி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.