நெல்சனின் அடுத்த திரைப்படம்! கோலமாவு கோகிலா 2 எடுக்க திட்டம்!!

0
41
#image_title

நெல்சனின் அடுத்த திரைப்படம்! கோலமாவு கோகிலா 2 எடுக்க திட்டம்!!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் அடுத்ததாக கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளியான ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் இயக்கினார். பல விமர்சனங்களுக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகப்பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக இயக்கவுள்ள திரைப்படம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.

இவர் முதன் முதலாக நடிகை நயன்தாரா வைத்து கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் பெரிய வெற்றியை நெல்சன் பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து நடிகர். சிவகார்த்திகேயன், நடிகர் விஜய், நடிகர் ரஜினிகாந்த் என அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களை வைத்து அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கினார்.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அடுத்து நெல்சன் திலீப்குமார் யாரை வைத்து இயக்கப் போகிறார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் அவர்கள் அடுத்ததாக தான் எடுத்த இரண்டு படங்களில் ஏதேனும் ஒன்றை இரண்டாம் பாகமாக எடுக்கப் போகிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது இவருடைய இயக்கத்தில் ஏற்கனவே 2018ம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக ஒருபக்கம் தகவல்கள் பரவி வருகின்றது. மற்றொரு பக்கம் நடிகர் தனுஷ் அவர்களை வைத்து அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் திரைப்படம் இயக்கப் போவதாகவும் ஒருபுறம் தகவல்கள் பரவி வருகின்றது.

இருப்பினும் நெல்சன் திலீப்குமார் அவர்கள் இந்த திரைப்படங்களில் ஏதாவது ஒன்றை எடுப்பாரா அல்லது வேறு ஏதாவது திரைப்படம் இயக்கப் போகிறாரா என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் நடிகர் கவின் நடிக்கவுள்ள திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் இதன் மூலமாக இயக்குநராக இருக்கும் நெல்சன் திலீப்குமார் தமிழ் திரையுலகில் அடுத்து தயாரிப்பாளராக அறிமுகமாகவும் உள்ளார்.