Sunday, July 20, 2025
Home Blog Page 4565

ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளியா? வெளிவரும் முடிவுகள்!

0

ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளியா? வெளிவரும் முடிவுகள்!

கொரோனா தொற்றானது கடந்த ஆண்டிலிருந்து கட்டுக்கடங்காமல் பரவிய நிலையில் தான் உள்ளது.இந்த கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்தே மக்களின் பொருளாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.கொரோனா தொற்று அதிகமாக பரவிய காரணத்தினால் சென்ற ஆண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு முழு ஊரடங்கை அமல்படுத்தியதற்கு நற்பலன் கிடைக்கும் விதமாக சென்ற ஆண்டு பாதிப்பு மிகவும் குறைந்து காணப்பட்டது.மீண்டும் சில தளர்வுகள் அடிப்படையில் மக்கள் வெளியே செல்ல உத்தரவிட்டனர்.

மீண்டும் மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்ததும் மக்கள் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.அதன் விளைவாக இந்த ஆண்டு கொரோனாவின் 2 வது அலை மக்களை பெருமளவு பாதித்தது.இந்த கொரோனாவின் இந்த 2-ம் அலைக்கு நமது இந்திய அதிகப்படியான உயிர்களை இழந்து விட்டது.அதுமட்டுமின்றி மற்ற நாடுகளிலிருந்தும் பல்வேறு உதவிகளை நாடி இருந்தோம்.இந்த கொரோனா தொற்றின் 2வது அலை பரவலிளிருந்து மக்களை காப்பாற்ற மீண்டும் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது.அந்தவகையில் தமிழ்நாட்டில் முதலில் சில தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தினர்.

அவ்வாறு அமல்படுத்தியதில் தொற்று பரவுவதை கட்டுக்குள் கொண்டு வரமுடியாததால் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அதனையடுத்து சென்ற மாதம் 31ம் தேதி முடிய வேண்டிய ஊரடங்கை மக்கள் நலன் கருத்தி மற்றொரு வாரம் சேர்த்து மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிய உள்ளது.

இந்நிலயில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து இன்று சென்னியிலுள்ள தலைமை செயலகத்தில் காலை 11.30 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.ஓரிரு நாட்கள் முன்பு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனக் கூறினார்.அந்தவகையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புகள் குறைவு என்றே அரசியல் சுற்று வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

இன்று உங்களுக்கு காதல் கசக்கும்! இன்றைய ராசி பலன்கள்!

0

இன்று உங்களுக்கு காதல் கசக்கும்! இன்றைய ராசி பலன்கள்!

மேஷ ராசி:

     இன்று நீங்கள் முடிவு எடுக்கும் முன் நன்கு யோசித்து எடுக்கவும். பணம் செலவாக கூடும். பணி அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள். உங்கள் உறவு இன்று பலப்படும். உங்கள் கவன குறைவினால் பண இழப்பு ஏற்படலாம்.

ரிஷப ராசி:

     உங்களின் நம்பிக்கை உங்களுக்கு வெற்றியை பெற்று தரும்.அது உங்களுக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். உங்கள் பணிகளை உற்சாகமாகவும்,எளிதாகவும் மேற்கொள்வீர்கள். துணையின் உணர்வினை புரிந்து நடப்பீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும்.

மிதுன ராசி:

     இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்களின் செயல்களில் வெற்றி ஏற்படும். உங்கள் கண்ணோட்டத்தின் மூலம் நல்ல முடிவை எடுப்பீர்கள். இன்று நீங்கள் தரப்பட்ட வேலைகளை ஆர்வமாக முடிப்பீர்கள். காதல் கசக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும்.

கடக ராசி:

     இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். யார் சொல்வதையும் நம்ப வேண்டாம். யதார்த்தமாக இருங்கள். பணியில் சாதக பலன்களை காண கடினமாக உழைக்க வேண்டும். முயற்சியை நம்பினால் வெற்றி கிடைக்கும். பணம் செலவாக வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசி:

     இன்று உங்களின் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். எதிர்மறை எண்ணங்களை வளர்க்கவும். சக பணியாளர்களுடன் பொறுமையை கடைபிடிக்கவும். துணையுடன் வாக்குவாதம் வரலாம். பணத்தை கவனிக்க தவறினால் இழக்க வாய்ப்புள்ளது.

கன்னி ராசி:

     உங்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வெற்றி பெறலாம். நீங்கள் சாதிக்க உங்களை மேம்படுத்த வேண்டும். பணியில் சவால்கள் நிறைந்து காணப்படும். அதையும் மீறி வெற்றி அடைவீர்கள். தகவல் தொழில் நுட்பம் மூலம் நீங்கள் சாதிப்பீர்கள். காதலின் இனிமை உணர்வீர்கள்.

துலாம் ராசி:

     இன்று சிறந்த பலன்கள் ஏற்படும். சில தடைகள் ஏற்பட்டாலும் முடிவில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். பணியிடத்தில் மாற்றங்கள் ஏற்படும். சூழ்நிலையை பொருத்து நீங்கள் மாற வேண்டும். காதலை பொறுத்தவரை முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.

விருச்சிக ராசி:

     இன்று உங்களது இலக்கை நோக்கி செயல்படும் போது வெற்றி கிடைக்கும். யோசித்து பணிகளை மேற்கொள்ளும் போது வெற்றியாகவும், எளிதாகவும் இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.நிதி நிலைமை சொல்லும்படி இருக்காது.

தனுசு ராசி:

     இன்று சில கால தடைகளுக்கு பிறகு இலக்கை பூர்த்தி செய்வீர்கள். கூடுதல் முயற்சி இருப்பின் முடிவில் வெற்றி காணலாம். இடைவிடாத முயற்சியுடன் செயல்படவும். காதல் இன்று குறைந்து காணப்படும். பணம் செலவாக கூடும்.

மகர ராசி:

     இன்று நீங்கள் வளர்ச்சி காண்பீர்கள். ஆற்றலை உணர்ந்து செயல்படுங்கள். தகவல் தொடர்பு மூலம் வெற்றி காண்பீர்கள்.காதலுக்கு ஏற்ற நாள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.தேவையான அளவு பணவரவு இருக்கும்.

கும்ப ராசி:

     இன்று அனுகூலமான முடிவுகள் எடுக்க மனநிலை தெளிவாக இருக்கும். பணிகள் அதிகரித்து காணப்படும். பணியின் காரணமாக பயணம் ஏற்படலாம். வாக்குவாதம் ஏற்படும். உங்களின் காதலை தந்தை ஏற்று கொள்ள மாட்டார். வரவும், செலவும் சமமாக இருக்கும்.

மீன ராசி:

     நீங்கள் திட்டமிட்டு செயல்படும் போது திருப்தி கிடைக்கும். இதன் மூலம் பாதுகாப்பாக உணரலாம். வேலை இடத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும். எனவே கவனமுடன் இருக்கவும். மனக்குழப்பம் காரணமாக தவறான முடிவுகளை எடுக்கலாம்.

மருத்துவரை தாக்கிய காட்டுமிராண்டிகள்! கண்டனம் தெரிவித்த மருத்துவர் சங்கம்!

0

மருத்துவரை தாக்கிய காட்டுமிராண்டிகள்! கண்டனம் தெரிவித்த மருத்துவர் சங்கம்!

கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை மையத்தில் உயிரிழந்ததால் நோயாளியின் உறவினர்கள் 24 பேர் மருத்துவரையும், மருத்துவ உதவியாளர்களையும், சரமாரியாக தாக்கி உள்ளனர்.

அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் கொரோனா நோயாளியை பரிசோதித்த பின்னர் கொரோனோ வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளி கியாசுதீனின் மரணத்திற்கு மருத்துவர் மற்றும் அவரது மருத்துவ குழுவினர் அலட்சியம் காட்டியதாக தாக்குதல் நடத்தியவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

ஆனால் மருத்துவர் தரப்பில் நோயாளி உடல்நிலை மோசமாக இருப்பதாக உறவினர்கள் என்னிடம் சொன்னார்கள், பிறகு நான் அவரது உடல்நிலையை பரிசோதித்த மூன்று மணி நேரத்தில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் சேனாபதி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள், அங்கிருந்த மருத்துவர் சியுஜ் குமார் சேனாபதியை கடுமையாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இந்த தாக்குதலில் அங்கு பணி புரியும் ஒரு பெண் உட்பட மேலும் இருவர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த விவகாரம் குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் ஜே.ஏ.ஜெயலால் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது தங்கள் உயிரை கூட பொருட்படுத்தாமல் மக்களுக்காக ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் உழைத்து வருகின்றனர். தங்கள் குடும்பத்தையும் மறந்து இரவு பகலாக நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.மேலும் அவர்கள் மிகவும் மன உளைச்சலில் உள்ளபோதும் நோயாளிகளை கவனித்து வருகின்றனர்.

மேலும் கொரோனா முன்களப்பணியாளர்களில் முதன்மையானவர்களாக விளங்கும் மருத்துவர்கள் மீது நாட்டின் பல்வேறுபகுதிகளில் தாக்குதல் நடத்தப்படுவது வேதனையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களால் மருத்துவர்கள் அச்சத்திலும், கவலையிலும் உள்ளதாக கூறியுள்ளார். மருத்துவர் மீது நோயாளிகளின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதை ஒருபோதும் ஏற்க முடியாது.

பாசம் காட்டிய மாமியார்! விஷயம் தெரிந்து அதிர்ந்த மருமகள்!

0

பாசம் காட்டிய மாமியார்! விஷயம் தெரிந்து அதிர்ந்த மருமகள்!

தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சிலா மாவட்டம், நெமிலி குட்டா தண்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு, காமரெட்டி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது.

திருமணத்துக்கு பிறகு அப்பெண்ணுக்கும், அவருடைய மாமியாருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனிடையே அப்பெண்ணின் மாமியாருக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் காரணமாக வீட்டுத்தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். மாமியாருக்கு கொரோனா என்பதால் ஒரே வீட்டில் வசித்தாலும் அவரிடம் இருந்து சமூக விலகலை கடைப்பிடித்து மருமகள் விலகியே இருந்து வந்திருக்கிறார்.

இது கண்டு  பிடிக்காத மாமியார் தன் மருமகளுக்கும் கொரோனா வைரஸை பரப்பவேண்டுமென்ற திட்டத்துடன் வேண்டுமென்றே தன்னுடைய மருமகளை அவ்வப்போது கட்டிப்பிடித்து பரிவுடன் இருப்பது போல் நடித்து வந்திருக்கிறார்.

மேலும் அவருடைய பேரக்குழந்தையையும் அவர் கட்டிப்பிடித்துள்ளார். இதன் காரணமாக மருமகளுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதனையே காரணம் காட்டி மருமகளையும் அவர் வீட்டிலிருந்து துரத்தியிருக்கிறார்.

அவர், வேறு வழியில்லாமல் தன்னுடைய சகோதரி வீட்டுக்கு சென்று தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்து வருகிறார். வீட்டிற்கு வந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மாமியாரின் பயோவார் அட்டாக் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 7 மாதங்களாக ஒடிசாவில் ஒப்பந்த ஓட்டுனராக பணியாற்றி வருவதால் அவராலும் தன்னுடைய மனைவிக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு மாமியார் செய்து வரும் கொடுமைகளை தாங்கி கணவன் வீட்டில் வசித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை பரப்பி தன்னை வீட்டை விட்டு துரத்தியதாக வேதனை தெரிவித்துள்ளார். மாமியார், மருமகளுக்கு கொரோனா பரப்பி வீட்டை விட்டு விரட்டிய சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Desirable Women 2020 யார் தெரியுமா? அதுவும் ‘Google ‘ இவருக்கு தந்த பெயர் என்ன தெரியுமா?

0

இந்தியாவில் மிகவும் விரும்பத்தக்க பெண் 2020 என்ற பட்டத்தை தூக்கிச் சென்றுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

2016 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இவர். இவர் தனது நடிப்பின் மூலம் உன் அழகின் மூலம் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கவர்ந்துள்ளார்.

இதனால் கூகுள் இவருக்கு ” National Crush” என்று பெயரைச் சூட்டி அறிவித்துள்ளது. National Crush என்று கூகிளில் தேடினாலே இவர் படம் தான் வருகிறது. அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் மிகவும் அழகான இடத்தை பிடித்துள்ளார் ராஷ்மிகா.

இப்பொழுது மீண்டும் இரண்டாவது முறையாக 2020 மிகவும் விரும்பத்தக்க பெண்    என்ற பட்டத்தை வென்றதன் மூலம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். . 2020 மிகவும் விரும்பத்தக்க மனிதர் என்ற பட்டியலில் கேஜிஎப் நடிகர் யாஷ் இடம் பெற்றுள்ளார்.

தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா அவருக்கு ஜோடியாக பாலிவுட் திரையில் மிஷன் மஜ்னு என்ற படத்தில் காலடி எடுத்து வைக்க தயாராக உள்ளார். இது மட்டும் இல்லாமல் தனது இரண்டாவது பாலிவுட் படமான குட் பை திரைப்படத்தில் புகழ்பெற்ற நடிகர் அமிதாப்பச்சனுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

பிடிக்காத சாப்பாடு தந்ததால் கணவன் செய்த கொடுமை! மகனுக்கு நேர்ந்த கதி!

0

பிடிக்காத சாப்பாடு தந்ததால் கணவன் செய்த கொடுமை! மகனுக்கு நேர்ந்த கதி!

பொது மக்களின் மனம் என் இவ்வளவு வக்கிரம் பிடித்து உள்ளது. எடுத்ததுக்கெல்லாம் கோவப்பட்டால் நிம்மதியாக வாழ முடியுமா? ஒருவருக்கொருவர் நிம்மதி இழந்து சண்டையிட்டு வாழ்வதன் மூலம் யாருக்கு என்ன லாபம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்தால் நன்மை தான்.

45 வயதான முர்லி என்ற நபர், உ.பி.யின் ஷாம்லியில், கோகவன் ஜலல்பூரில், வசித்து வருகிறார். இவருக்கு சுதேஷு என்ற மனைவியும், 20 வயதான ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த வாரம் முர்லி, இரவு உணவு சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளுக்கு வந்த போது அந்த மனைவி அவருக்கு ரொட்டி சுட்டு கொண்டு வந்து சாப்பிட கொடுத்துள்ளார். அதற்க்கு அந்த கணவன் தனக்கு ரொட்டி வேண்டாம் என்றும் வெஜிடபிள் சாலட் தான் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த மனைவி தனக்கு வேறு வேலையிருப்பதாக கூறிவிட்டு போய் விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கணவன் தனது வீட்டிலிருந்த மண் வெட்டியை எடுத்து அவரது மனைவியை துண்டாக வெட்டியுள்ளார்.

அப்போது அவரின் உடல் ரத்த வெள்ளத்தில் மிதந்து துடித்து கொண்டிருந்த நிலையில் அவரது 20 வயதான மகன் தனது தாயை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், தனது தாயை ஏன் இப்படி செய்தாய் என்று கூறி அவரது தந்தையை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த தந்தை, அந்த மண் வெட்டியால் அவரின் மகனையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

அந்த பெண் மற்றும் அவரது மகனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், இவர்களின் வீட்டிற்க்கு ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் துடித்த மனைவியையும் அவரின் மகனையும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவரின் மகனுக்கு சிகிச்சையளிக்க பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து,  மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் முர்லியை தேடி வருகின்றனர்.

வீடியோ: அலாவுதீன் சீரியலில் நடிக்கும் ஹீரோயின் குளிக்கும் வைரல் வீடியோ!

0

அலாவுதீன் மற்றும் பல படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடித்து வருபவர் அவ்னீத் கவூர் . சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் சமீபத்தில் வீடியோ ஒன்று மூலம் அனைவரின் மனதையும் கொள்ளை அடித்துள்ளார்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மழையில் நீச்சல் குளத்தில் குளிப்பது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று மழை பெய்து ஒரு அழகான நிகழ்வாக அந்த தருணத்தை உருவாக்குகிறது. அவ்னீத் கவூர் தனது ரசிகர்களுக்காக வீடியோவை பகிர்ந்துள்ளார். இவர் சின்னத்திரையில் பல்வேறு வேடங்களில் நடித்து தனது நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார்.

அவ்னீத் கவூர் மிகவும் அழகு மற்றும் நேர்த்தி ஆனவர் என புகழ் பெற்றவர். ஒவ்வொரு முறையும் அவரது அழகை அவர் பிரம்மிக்க வைக்கும் விதத்தில் நிர்வகிக்கிறார். ஆடை அலங்காரங்களை பற்றி முக்கியமான கருத்துக்களையும் தருகிறார். இளம் வயதில் பலரின் இதயங்களை வென்றுள்ளார். மேலும் அற்புதமான உடை அலங்காரம் மற்றும் நடை ஆகியவற்றின் மூலம் தன்னை முன்வைத்து அறிமுகப்படுத்துகிறார். அவருடைய அழகும் குணமும் இரண்டுமே அவரை சினிமா துறையில் அவரது ரசிகர்களிடையே மிகவும் விரும்பப்பட்ட நடிகையாக ஆக்கியுள்ளது.

https://www.instagram.com/p/CPnI2tLpp7x/?utm_source=ig_web_copy_link

கணவனின் உண்மை முகம்! மனைவி செய்த புகார்!

0

கணவனின் உண்மை முகம்! மனைவி செய்த புகார்!

தற்போதெல்லாம் எது? எதற்காக? என்றெல்லாம் இல்லாமல் வீட்டிற்கு ஒரு மனைவி மற்ற படி வெளியில் யாராக இருந்தாலும் பிடித்து இருக்கிறது.உன்னை காதலிக்கறேன் என யாரிடமாவது கூறி அவர்களை கைக்குள் வைத்து கொள்ளும் சம்பிரதாயம் நிறைய அதிகரித்து விட்டது.மனைவியும் வேண்டும் வெளியில் அந்த உறவும் வேண்டும் என்று ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு வாழ்கின்றனர்.

இந்தி நடிகை நிஷா ராவல், தனது கணவரும், நடிகருமான கரண் மேஹ்ரா மீது மும்பை போலீசில் புகார் அளித்தார். அதில் தன் கணவர் தன்னை அடித்து சுவரில் தள்ளியதாகவும், இதில் தனது தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது என்றும் மனுவில் கூறி இருந்தார்.இதையடுத்து கரண் மேஹ்ரா கைதாகி தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.

இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நிஷா ராவல் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் அவர் பேசும்போது, நானும், கரண் மேஹ்ராவும் 14 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துள்ளோம். எங்களுக்குள் யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் நடந்துள்ளன. கரண் மேஹ்ராவுக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது. அதுபற்றி முதலில் எனக்கு தெரியவில்லை.

இப்போது எனக்கு தெரியவந்ததும் கரணிடம் கேட்டேன். அதற்கு ஆமாம் என்றார்.அந்த பெண்ணை காதலிப்பதாகவும், அவளோடு உறவு வைத்திருப்பதாகவும் கூறினார். இதுகுறித்து அவரது பெற்றோரிடமும் தெரிவித்தேன். கரண் கள்ளத்தொடர்பை விட்டு விட்டு என்னிடம் மன்னிப்பு கேட்டால் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து வாழ தயாராக இருக்கிறேன் என்றார்.

மீண்டும் ஃபார்முக்கு வந்த குட்டி குஷ்பு!

0

இந்திய சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத சகாப்தமாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவர் ஹிந்தி மொழி திரைப்படத்தில் முதன் முதலாக கால்பதித்தார். மெல்ல, மெல்ல தன்னுடைய நடிப்புத் திறமை காரணமாக, தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி ஹன்சிகா பல நடிகர்களுடன் தமிழ் திரையுலகில் நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

இந்த சூழ்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழிகளிலும் உருவாக இருக்கும் ஒரு இணையதள தொடரில் இதுவரையில் இல்லாத உச்சகட்ட கவர்ச்சி காட்டி இவர் நடித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் கொழுகொழுவென இருந்த நடிகை அதோடு சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் என்பது பலரும் அறிந்ததுதான்.

நல்ல மனம் வாழ்க! ஜித்தன் ரமேஷ்க்கு குவியும் பாராட்டு!

0

தமிழ் திரையுலகில் நடிகர் ரமேஷ் கடந்த 2005ஆம் வருடம் வெளியான அஜித்தின் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. என்று சொல்லப்படுகிறது. இதன் பிறகு ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது பாகத்தில் போட்டியாளராக பங்கேற்று கொண்டு மிகப் பெரிய அளவில் பிரபலமானார்.

இந்த சூழ்நிலையில், நடிகர் ஜித்தன் ரமேஷ் நோய்த்தொற்று காலத்தில் பணிபுரிந்து வரும் காவல்துறை ஊழியர்களுக்கு மற்றும் சாலையோரம் வாழும் ஏழை மக்களுக்கும், உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், போன்றவற்றை வழங்கி வருகிறார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ஏதோ என்னால் முடிந்தது என்று பதிவிட்டு நீங்களும் வாருங்கள் ஒன்றாக இணைந்து இந்த நோயினை வெற்றி கொள்வோம் என்று பதிவிட்டிருக்கிறார். ஜித்தன் ரமேஷின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.