டாய்லெட்டில் கேமரா வைத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது!!

0
205
#image_title

டாய்லெட்டில் கேமரா வைத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது!!

சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள குட்டைத் தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவருக்கு வயது இருபத்து ஆறு. இவர் ஒரு பெயிண்ட் அடிக்கும் கூலித்தொழிலாளி.

இவர் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

அங்கே கீழ் இருக்கும் வீட்டின் கழிப்பறையில் தனது அலைப்பேசியின் கேமராவை ஆன் செய்து ஒளித்து வைத்திருந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் கழிப்பறைக்கு சென்றுள்ளார்.

அங்கே அலைப்பேசி கேமராவை ஆன் செய்து வைத்திருப்பதை பார்த்த சிறுமி அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு அனைவரையும் கூப்பிட்டு கூச்சளிட்டுள்ளார். இதைப்பார்த்த அந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி தனது அலைப்பேசியை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்து விட்டார்.

இதுகுறித்து அந்த வீட்டில் உள்ள சிறுமியின் பெற்றோர்கள் அருகே உள்ள அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனால் மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று நிகழ்வுகள் நடக்காமல் இருக்க பெண்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், கழிவறைக்கு செல்லும் போதோ அல்லது உடை மாற்றும் அறைக்கு செல்லும் போதோ கவனத்துடன் இருக்கவும் வலியுறுத்தப்படுகிறது.

 

 

author avatar
CineDesk