பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே கப்பலை விட்டு சென்ற பயணிகள்

0
48

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள சொகுசுக் கப்பலில்  இருந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பயணிகளை தரையிறங்க அனுமதித்த செயல் ஏற்றுகொள்ள முடியாதது என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ரூபே பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பலிலிருந்து மார்ச் மாதம் 2,700 பயணிகள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் உடல் நலம் சரியில்லாத பயணிகள் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே கப்பலை விட்டு சென்று  விட்டனர்.  இந்த சம்பவத்தையொட்டி விசாரணை நடத்தப்பட்டது.  ஆனால் இந்த சம்பவத்திற்கு தொடர்பானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

author avatar
Parthipan K