குழந்தைகளை மட்டும் அதிகமாக தாக்கும் நிமோனியா? காரணம் என்ன ?

0
236

குழந்தைகளை மட்டும் அதிகமாக தாக்கும் நிமோனியா? காரணம் என்ன ?

நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் ஒரு வகையான தொற்று நோய். இதனை நுரையீரல் அலர்ஜியும் என்பார். சமீப காலமாக குழந்தைகளின் உயிரை அதிகம் பலி கேட்கும் இந்த கொடிய நோயின் காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்னவென்று காணலாம்.
இந்த நிமோனியா நோய் எதனால் ஏற்படுகிறது! நிமோனிய தொற்று ஏற்பட பலவித காரணங்கள் கூறப்படுகின்றன. எனினும் பாக்டீரியா வைரஸ் போன்ற நுண்ணுயிர் தாக்குதல் காரணமாகவே அதிகம் இந்த நிமோனியா பிரச்சனை ஏற்படுத்துவதாக தகவல் வெளியாகின.

நிமோனியா பிரச்சனையானது நுரையீரலில் ஏற்படும் ஒருவகையான அலர்ஜி காரணமாக ஏற்படுகிறது. இந்நிலையில் நிமோனியா பிரச்சனை உள்ளவர்கள் விரிவான சுவாசம் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிம்மதியா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படும் அதனுடன் காய்ச்சல் அதீத உடல் வலி மற்றும் சுவாச பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். நுரையீரல் பாதையில் ஏற்படும் அலர்ஜியாக இந்த நிமோனியா நோய் ஏற்படுவதால் நிமோனியா பிரச்சனை உள்ளவர்களுக்கு இருமல் பிரச்சனை சற்று அதிகமாகவே இருக்கும் இருமலையின் போது ரத்தம் கலந்து சளி வெளியேறுவது வழக்கமாக உள்ளது.

நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு போல் இருமல் மற்றும் மார்பு பகுதியில் எலும்பு மற்றும் சதை பகுதிகளில் அதிக வலி ஏற்படும். இவை நிமோனியா நோயின் அறிகுறியாக இருக்கலாம் என தகவல் வெளியாகின. இருமலின் போது வெளியாகும் சளியை விழுங்கும்போது குமட்டல் மற்றும் ரத்த வாந்தி வெளியேறுவது போன்ற பிரச்சனைகள் இருந்தால் அது நிமோனியாவாக இருக்கலாம் என ஆய்வில் உறுதி செய்யப்படுகிறது.

நிமோனியா தொற்றின் ஆரம்ப நிலையில் சைனோசிஸ் பிரச்சனை ஏற்படுகிறது. உதடு நக கண்களில் நிறம் கருநீளமாக மாற்றம் அடையும் என தகவல் தெரிவிக்கின்றன. இந்தக் கொடிய நோயானது ரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகம் தாக்குகிறது எனவே குறிப்பிட்ட இந்த அறிகுறிகளுடன் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்வது நல்லது.

author avatar
Parthipan K