ஸ்ரேயா கோஷல் குரலில் பொன்னியின் செல்வன் அடுத்த பாட்டு… ரிலீஸ் எப்போ? ரஹ்மான் பதில்

0
76

ஸ்ரேயா கோஷல் குரலில் பொன்னியின் செல்வன் அடுத்த பாட்டு… ரிலீஸ் எப்போ? ரஹ்மான் பதில்

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது பொன்னியின் செல்வன் முதல் பாகம். படத்தின் ப்ரமோஷனாக இதுவரை போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

அதே போல கடந்த ஜூலை 30 ஆம் தேதி ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடல் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்த பாடலை ஏ ஆர் ரஹ்மான் பாட இளங்கோ கிருஷ்ணன் எழுதி இருந்தார். சோழர் கால இசை மற்றும் பாடல் போல இல்லாமல் வெஸ்டர்னாக பாடல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும், பாடல் இன்ஸ்டண்ட் ஹிட் ஆனது. குறிப்பாக கன்னட வெர்ஷன் மற்ற மொழி பாடல்களை விட அதிகமாக ரசிகர்களைக் கவர்ந்தது.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர்  செகண்ட் சிங்கிள் பாடலான சோழா சோழா பாடல் வெளியானது. இந்த பாடல் சோழர்களின் வெற்றிக்குப் பிந்தைய கொண்டாட்டத்தை சொல்லும் துள்ளலிசை பாடலாக அமைந்தது. முதல் பாடல் போலவே இந்த பாடலும் ரசிகர்களைக் கவர்ந்தது. ஆதித்த கரிகாலனை மையப்படுத்தியதாக இந்த பாடல் அமைந்தது.

இதையடுத்து ஸ்ரேயா கோஷல் குரலில் அடுத்து மூன்றாவது பாடல் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் ரஹ்மான் டிவிட்டரில் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பாடலின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.