விஜய் ரசிகர்கள் செய்த தரமான செயல்!! நெகிழ்ந்து போன மக்கள்!!

0
116
Quality work done by Vijay fans !! Flexible people !!
Quality work done by Vijay fans !! Flexible people !!

விஜய் ரசிகர்கள் செய்த தரமான செயல்!! நெகிழ்ந்து போன மக்கள்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜோசப் விஜய். இவரை இவரது ரசிகர்கள் தளபதி என்று அன்புடன் அழைத்து வருகிறார்கள். இவர் தொடக்கத்தில் தனது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். பத்து வருடங்களுக்கு பிறகு தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராக உள்ளார். இவருக்கு புலம் பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்கள் 5 கண்டங்கள் மற்றும் என்பது நாடுகளில் வெளியாகி உள்ளது.

விஜய் தனது பத்து வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகமானார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி என்ற திரைப்படம் வரை குழந்தை நடிகராக தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ஆம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் முதன் முறையாக முதன்மை நடிகராக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கத்தில் உருவான பூவே உனக்காக திரைப்படத்தில் தான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இன்று வரை விஜய் கதாநாயகனாக 62 திரைப்படங்களில் நடித்துள்ளார். மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள் பெற்றுள்ளார். ஒரு காஸ்மோ பாடலின் விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் ஒரு இந்தியா டுடே விருதும், ஒரு சினிமா விருது, 8 விஜய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார். ஒரு முறை ஐக்கிய பேரரசின் நாட்டு திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் இவர் நடிப்பில் உருவாகி அண்மையில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் சாதனையைப் படைத்தது. இதை தொடர்ந்து இவர் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் கூட அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மனதை வென்றது. இதைத் தொடர்ந்து தற்போது விஜய் ரசிகர்கள் அவருக்கும் முழு உருவ சிலை ஒன்றை உருவாக்கியுள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அவருக்கு முழு உருவச் சிலையை உருவாக்கியுள்ளனர். இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அங்கு அவரது ரசிகர்கள் அவரின் முழு உருவ சிலை வைத்து கொண்டாடி உள்ளனர். இந்த செய்தி தற்போது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தற்போது இந்த ஒரு செய்தி வலைதளத்தில் வைரலாகி வருகிறது.